districts

img

பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற இரண்டு நாட்கள் பிரச்சார இயக்கம்

திருப்பூர், ஜூலை 14 - மக்கள் விரோத பாஜக அரசை ஆட்சி யிலிருந்து அப்புறப்படுத்த தொழிலா ளர்கள் மத்தியில் இரண்டு நாட்கள் பிரச் சார இயக்கம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமையில் அவி னாசி சாலையில் உள்ள சிஐடியு சங்க  அலுவலகத்தில் வியாழனன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் விரோத, தேச விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத பாஜக அரசை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதற்காக உழைக்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற முழக்கத்துடன், தொழிலாளர்கள் மத்தி யில் இரண்டு நாட்கள் பிரச்சார இயக்கம்  நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டது. மேலும் வெள்ளையனே வெளி யேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9 ஆம்  தேதி சென்னையில் நடைபெறும் பெருந் திரள் அமர்வு இயக்கத்தில் இங்கிருந்து  திரளாக தொழிலாளர்கள் பங்கு பெறு வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், சிஐடியு கட்டிட கட் டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார், ஏஐடியுசி மாவட்ட தலைவர் எம்.மோகன், ஏஐடியுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பி எப் மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி,  எல்பிஎப் அமைப்புசாரா சங்க செயலா ளர் தண்டபாணி, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் ஏ.சிவகாமி, ஐஎன்டியூசி பனியன் சங்க தலைவர் அ.பெருமாள், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.