அவிநாசி, பிப்.1- விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆத ரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத் தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்த றியாளர்களுடன் ஏற்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோ ரியும், 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் விசைத்தறி உரிமையா ளர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டங்க ளுக்கு ஆதரவு தெரிவித்து கணக்கம் பாளையம், பெருமாநல்லூர், மெய்யா டம் பாளையம், ஆலம்பாளையம், துளுக்கமுதுர், கல்லுமடைகுட்டை உள்ளிட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திங்க ளன்று பிரச்சார கூட்டங்கள் நடை பெற்றன. இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி கள் பழனிச்சாமி, முருகன், குட்டி(எ) மோகனசுந்தரம், ஏஐடியூசி செல்வ ராஜ், முத்துசாமி, எல்பிஎப் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.