districts

img

இடுவாயை மாநகராட்சியுடன் இணைக்க அனைத்து கட்சிகள் எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 5 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது  குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தவும் அனைத்து கட்சி கள் முடிவு செய்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இடுவாய் ஊராட்சி கிளைகள் சார்பாக வியாழனன்று மாலை இடு வாய் கன்னியாத்தாள் கோயில் மண் டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டது. மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி  தலைமையிலும், இடுவாய் ஊராட்சி  மன்ற தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினரு மான க.கணேசன் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாசன சபை சங்க தலைவர் தங்க வேல், ஒன்றிய நிர்வாகி ரவி, ஆத வன், சீராணம்பாளையம் விஸ்வநா தன், முத்துவேல், திருநகர் கேசவன்,  பாரதிபுரம் ஆனந்தன் ஐயப்பன் ஆகிய நிர்வாகிகளும், அதிமுக சார் பாக மாவட்ட மீனவர் அணி செயலா ளர் பழனி, சீராணம்பாளையம் லோக நாதன், சின்னக்காளிபாளையம் பாலு, மதிமுக சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, சிவக் குமார், கார்த்தி, கொமதேக திருப் பூர் மேற்கு மண்டலத் தலைவர் பொன் னுசாமி, காங்கிரஸ் கட்சியின் இடு வாய் தலைவர் நாட்டாமை குமார சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  இடுவாய் செயலாளர் பழனிசாமி,  நடராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் நிலவள வங்கி முன்னாள் இயக் குநர் க.ஈஸ்வரன், கிளைச் செயலா ளர் பி.ரத்தினசாமி, ராமமூர்த்தி மற்றும் இடுவாய் ஊராட்சியின் பல் வேறு குடியிருப்போர் சங்க நிர்வாகிக ளும் திரளாகக் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத  விவசாயிகள் சங்கம், மக்கள் நீதி மய் யம் நிர்வாகிகள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக கூட்ட முடிவு களை ஆதரிப்பதாகத் தெரிவித்த னர். இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சுப்பிரமணி, ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, மாநகராட்சிக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு  செயல்பட்டு வரும் இடுவாய் ஊராட் சியை  மாநகராட்சி உடன்  இணைத் தால் பொது மக்களின் அத்தியாவசிய பணிகளை செயல்படுத்துவதற்கு தேவையில்லாத காலதாமதம் ஏற்ப டும். பொதுமக்கள் மாநகராட்சி யோடு இணைப்பதால் கூடுதல் வரிக ளும், பத்திரப் பதிவுகளுக்கு மிகக்  கூடுதலான தொகைகளும் செலுத்த  வேண்டி இருக்கும். மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தின் கீழ் வேலை பெறும் 1500 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் மாநகராட்சி யோடு இணைப்பதால்  வேலை  பாதித்து வாழ்வாதார இழப்பு ஏற்ப டும். எனவே இடுவாய் ஊராட்சியை  மாநகராட்சியோடு இணைக்க வேண் டாம் என அனைத்து கட்சியினர்  சார்பாக ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கவும், மாநக ராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக  மக்களைத் திரட்டி இயக்கம் நடத்த வும் முடிவு செய்யப்பட்டது. மார்க் சிஸ்ட் கட்சியின் இடுவாய் கிளைச் செயலாளர் க.கருப்புசாமி நன்றி கூறி னார்.