நாமக்கல், ஜூலை 6 - அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். அவருக்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீஸ் கீதா பங்கேற்று, 4 வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். அகில இந்திய அளவில் முத லிடம் பெற்ற ஆயுதப்படை போலீஸ் கீதாவை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். அதில், டி.எஸ்.பி. ஆனந் தராஜ், ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், ஆய்வா ளர் சக்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் 50 ஆவது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு, ஒத்தி வாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிர பயிற்சி பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள, தமிழக அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்திய அளவிலான மக ளிர் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி, 4 நாட்கள் நடந்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 30 அணிகளைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பங்கேற்றனர்.