districts

img

இலவச வீட்டுமனை கேட்டு மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

உதகை, நவ.2- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அனைத்திந்திய ஜன நாயக மாதர்‌ சங்கத்தினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருக்கும்‌ வீட் டுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி தமிழகம்‌ முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பெருந்திரள்‌ முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை தாலுகா  தலைவர் என்.பானுமதி தலைமையில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது உதகை தாலூகா, ஆர்‌.சி.காலனி பகுதியில்‌ ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான குடிமனை கேட்டு விண்ணப்பித்த 27 குடும்பத்தார்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டம்‌முழுவதும்‌பட்டா இல்லாதவர்களின்‌ விண்ணப்பங்கள்‌, நில ஆதார விவரங்கள்‌, குடும்ப அட்டை, ஆதார்‌அட்டை நகல்கள்‌ இணைத்து விண் ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பினர்.  இதேபோன்று, கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து நகர மன்ற உறுப்பினர்கள் லீலா வாசு, யசோதா ஆகி யோர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.