districts

img

ஸ்தாபக தலைவர் கி.வீரம்மாள் ஜோதி பயணம் துவங்கியது

கோவை, செப்.28- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதையொட்டி, இச்சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் கி.வீரம்மாள் ஜோதி பயணம் கோவையில் புத னன்று எழுச்சியோடு துவங்கியது. மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு கடலூர் மாவட்டத்தில் செப்.29 துவங்கி அக் டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வன்முறையை வேரறுப்போம், பெண்ணுரி மையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்து டன் நடைபெறும் இம்மாநாட்டை எழுச்சிகர மாக நடத்துவதற்கு மாதர் சங்கத்தின் பல் வேறு பிரச்சார இயக்கங்களை திட்டமிட் டுள்ளனர். இதன்ஒருபகுதியாக மாதர் சங்கத் தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், இச் சங்கத்தின் மாநில தலைவர், பொருளாளர் மற்றும் கோவை மாவட்டத்தில் மாதர் சங் கத்தை பல்வேறு பகுதிகளில் உருவாக்கிய வர் இருகூர் தோழர் கி.வீரம்மாள். தான் வகித்த பொறுப்புகளை தனது வாழ்நாள் இறுதிவரை திறம்பட களப்பணியாற்றி மறைந்தவர்.

இவரின் நினைவாக இருகூரில் இருந்து கடலூர் மாநாட்டு திடல் வரை கி. வீரம்மாள் ஜோதி பயணம் செல்ல உள்ளது. இதன் துவக்கவிழா நிகழ்வு இருகூரில் எழுச்சி யோடு நடைபெற்றது.  மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு மற்றும் சூலூர் தாலுகா குழு இணைந்து  நடைபெற்ற நிகழ்விற்கு மாதர் சங்க கோவை மாவட்ட தலைவர் சி.ஜோதிமணி தலைமை தாங்கினார். சூலூர் தாலுகா செயலாளர் கே. லலிதாமணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் டி.சுதா துவக்கி வைத்து உரையாற்றினார். நினைவு ஜோதியை மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி எடுத்துக்கொடுக்க, மாவட் டக்குழு உறுப்பினர் கே.கயல்விழி பெற்றுக் கொண்டார். முன்னதாக நடைபெற்ற ஜோதி  பயண பிரச்சார இயக்கத்தில் மாதர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா உரை யாற்றினார். இதில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாநில பொருளாளர் எஸ்.பாரதி, இருகூர் பேரூராட்சி சிபிஎம் வார்டு உறுப்பி னர் எஸ்.ஸ்டாலின்குமார், சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி. சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி உரையாற்றினர். முடிவில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜே.உஷா நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.