கோவை ஜூலை 2- மனித உரிமை ஆர்வலர்கள் தீஸ்டா செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்ததை கண்டித்து கோவை யில் சனியன்று அனைத்து ஜனநாயகங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை போராளியும், மூத்த வழக்கறிஞருமான தீஸ்டா செதல்வாட் ஜூன் 26ஆம் தேதி மும்பையில் கைது செய் யப்பட்டார். விசாரணை குழுவின் முன்பு சாட்சியம் அளித்த ஓய்வு பெற்றக் காவல்துறை ஏடிஜிபி ஆர். பி. ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் இந்த பாசிச நடவடிக்கையை கண்டித்து அனைத்து ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பியுசிஎல் தேசிய செயலாளர் பாலமுருகன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், பியுசிஎல் மாவட்ட செயலா ளர் சேகர் அண்ணாதுரை, வழக்கறிஞர் சுப்பிரமணி, நேரு தாஸ் மற்றும் சிபிஐ(எம்எல்), தந்தை பெரியார் திராவிட கழ கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்ற னர்.