districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குறைவான குடிநீர் விநியோகம்

சேலம், ஆக.29- சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று (புதனன்று) குடிநீர்  விநியோகம் குறைவாக இருக்கும் என மாநகராட்சி ஆணை யர் சீ.பாலச்சந்தர் தெரிவித்தார். சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர்த் திட்டம் செயல் படும் மேட்டூர், தொட்டில்பட்டி, கோம்புரான்காடு குடிநீர்  உந்து நிலையத்தில் மின் மோட்டாரில் பழுது ஏற்பட் டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகள் மற்றும் குடிநீர் பரா மரிப்புப் பணிகள் புதனன்று மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் வரத்துக் குறை வாக இருக்கும். பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் 35 ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதி

உதகை, ஆக.29. நீலகிரியில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 35 ஊராட்சி களுக்கும் அதிவேக இணைய வசதி வழங்குவதற்காக, கேபிள் பதிக்கும் பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித் துள்ளார். நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பிராட் பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக ஒன்றிய அரசு பாரத்  நெட் திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் 2 ஆவது  கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி,  தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், தமிழ்நாட்டில் ரூ.1,627 கோடியில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் சார்பில் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரி கள் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1  ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை அனைத்து ஊராட்சி களுக்கும் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35  ஊராட்சிகளில் 315 கி.மீ. தூரத்திற்கு இந்த திட்டம் நிறை வேற்றப்படும். உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொட்டபெட்டா உட்பட பல்வேறு ஊராட்சி பகுதி களுக்கு கேபிள்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரு கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளில் அதி வேக இணையதள வசதிக்காக 315 கி.மீ. தூரத்துக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இணையதள வசதிக்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் தரைவழியாகவும், மின் கம்பங்கள் மூலமா கவும் இணைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான உபகர ணங்கள் கிராம ஊராட்சிகளில் சேவை மையம் அல்லது  அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த திட்டத் திற்கான அங்குள்ள உபகரணங்கள் உள்ள அறை சம்பந்தப் பட்ட ஊராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் அமைக்கப்படும் மின் கலன், இன்வெட்டர், ரூட்டர், கண்ணாடி இழை ஆகிய உப கரணங்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. எனவே,  இவற்றை சேதப்படுத்துதல், திருடுதல் போன்ற செயல்களில்  ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும், என்றார்.

கனரா வங்கியின் சார்பில் சிசிடிவி பழுது பார்த்தல் இலவச பயிற்சி

ஈரோடு, ஆக.29- சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி இருபாலருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது. கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக செப்.11 முதல் 26 வரை 13 நாட்கள்  பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட  அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியின் முடி வில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவர். விருப்பமுள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு  உட்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு கனரா வங்கி கிராமப்புற சுய  வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம்  பைபாஸ் ரோடு, ஈரோடு -02 என்ற முகவரியிலும், 8778323213,  7200650604, 0424-2400338 எண்களிலும் தொடர்பு கொள்ள லாம்.

டேன்டீ கட்டடத்தை சேதப்படுத்திய காட்டுயானை

உதகை, ஆக.29- பந்தலூர் அருகே டேன்டீ கட்டடத்தை சேதப்படுத்திய காட்டுயானையை, வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டி யடித்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா டேன்டீ ரேஞ்ச் எண்.4, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியி ருப்புக்குள் புகுந்து தொழிலாளர்கள், மக்களை அச்சுறுத்தி  வருகிறது. இந்நிலையில், கரியசோலை, தேவாலா டேன்டீ  ரேஞ்ச் எண்.4 பகுதிகளுக்குள் குட்டிகளுடன் காட்டு யானை கள் புகுந்தன. இதன்பின் தேவாலா - நெலாக்கோட்டை சாலையில் வாகனங்களை வழிமறித்தன. அங்கு டேன்டீ தொழிலாளர்கள் பச்சை தேயிலை எடை போடும் கட்ட டத்தின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் தொழி லாளர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து  யானைகளை விரட்டியடித்தனர். இதேபோல், பந்தலூரில் இருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலையில் எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதன்பின் சேரம் பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப் பாளர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் காட்டுயானை குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அங்கன்வாடி கட்டட மின் இணைப்பு துண்டிப்பு: குழந்தைகள் அவதி

நாமக்கல், ஆக.29- அங்கன்வாடி மையத்திற்கான மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பை  மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இதனால், குழந்தைகள் பெரும் அவ திக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே, உள்ள குப்பாண்டாபா ளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஆலங் காடுவலசு பகுதியில் அம்மன் கோயில்  பின்புறம் அங்கன்வாடி மையம் ஒன்று  செயல்பட்டு வருகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அங்கன் வாடி மையம் தொடர்ந்து நான்கு ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. இந்த  அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டா ரத்தில் உள்ள குழந்தைகள் வந்து செல் கின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மின்கட்டணம் ஏதும் செலுத்தாத நிலையில், தற்போது மின் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் வந் துள்ளதாக கூறி மின்வாரிய ஊழியர்கள் பியூஸ் கேரியரை பிடுங்கிச் சென்றுள்ள னர். இதனால் கடந்த ஒரு வாரமாக அங் கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தை கள் காற்று வசதியின்றி அவதி அடைந் துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட் டினர். இதுகுறித்து குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளித் தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை மேற்கொண்டு மின்  இணைப்பை மீண்டும் வழங்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு கல்லூரியில் வயர்கள் திருட்டு

நாமக்கல், ஆக.29- நாமக்கல் மாவட்டம், ராசி புரம் அருகே உள்ள ஆண்ட களூர்கேட் பகுதியில் திரு வள்ளுவர் அரசு கலைக்கல் லூரி செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாளான ஞாயி றன்று கல்லூரிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் கள், வணிகவியல் துறைக் குள் ஜன்னலை உடைத்து சென்றுள்ளனர். இதன்பின் 8 வகுப்பறை கதவின் பூட்டை  உடைத்து, சுவரில் பொருத் தப்பட்டிருந்த காப்பர் (தாமிர) வயர்களை திருடிச் சென் றுள்ளனர். இதையடுத்து வழக்கம்போல திங்களன்று  காலை வகுப்பறைகளை  திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், உள்ளே  சென்று பார்த்தபோது வயர் கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அரசு கல்லூ ரிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.