districts

பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

உதகை, மே 8- உதகை - மஞ்சூர் சாலையில் ஏற் பட்ட திடீர் மண்சரிவால் அப்பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனை அனுபவிக்க வந்து செல்லும் சுற் றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை நேரங் களில் பரவலாக மழை பெய்கிறது. இத னால் மாவட்டம் முழுவதும் குளுமை யான காலநிலை உள்ளது. இதன் கார ணமாக சுற்றுலா பயணிகள் உற்சாக மாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இதையொட்டி அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள் ளது. இதற்கிடையே உதகை - மஞ் சூர் சாலையில் தினமும் நூற்றுக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின் றன. இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலை யில், இச்சாலையில் உள்ள நொண்டி மேடு என்ற பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த இடத் தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர  வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், மண் சரிந்து சாலையில் விழுந்ததால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், சாலையில் கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அந்த வழியே வாகன போக்குவரத்து சீரானது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரத்தில் உள்ள மண்திட்டில் ஈரப்பதம் அதிகரித் துள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து சாலையில் விழுந்து இருக்கி றது. அங்கு மேற்கொண்டு மண் சரிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக் கப்படும், என்றனர்.