districts

img

இதுவரை சந்திக்காத தோல்வியை அதிமுக சந்திக்கும்

ஈரோடு, பிப்.27- ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக இதுவரை சந்திக் காத தோல்வியை சந்திப்பார் கள். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி அமோக வெற்றியை பெரும் என ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் நம் பிக்கை தெரிவித்தார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர் தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்தனர். ஈரோடு, திருமகன் ஈவெரா வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கினை பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் பேசியபோது, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் கை சின்னத்திற் குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை  இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டா லினின் கரங்களை பலப்படுத் தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி அமையும்.  வரப்போகிற மக்களவைத்  தேர்தலுக்கு முன்னோட்ட மாக, வெள்ளோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமையும். எதி ரணியில் இருப்பவர்கள் இது வரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார் கள்.   எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக் குத் தெரியும். அதனால், விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது,  அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கி றார்கள். என்றார்.  இதேபோன்று, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஹெச்.கிருஷ்ண னுண்ணி மற்றும் அவரது குடும்பத்தார் சம்பத் நகர் ஸ்ரீஅம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.