கோயம்புத்தூர், மார்ச் 23- “தேர்தல் முடிந்ததும் சுவை யான பிரியாணி போடுவதாக அறிவித்திருந்தோம்; ஆனால், இப்போது கோவைக்கு சுவை யான ஆட்டுப் பிரியாணியே தயா ராகிக் கொண்டிருக்கிறது” என்று கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதை குறிப்பிட்டு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின ரும் தங்கள் பங்கிற்கு அண்ணா மலையை சரமாரியாக கிண்டல டித்துள்ளனர்.
சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அதி முக செய்தி தொடர்பாளர் கல்யா ணசுந்தரம் பேசியுள்ளார், அப் போது, “கோவை என்பது எஸ்.பி.வேலுமணி என்ற மாபெரும் சிங்கத்தின் கோட்டை. இந்த சிங் கத்தின் கோட்டைக்குள் வந்து ஆடு சிக்கி உள்ளது” என்று அண் ணாமலையை கிண்டலடித்துள் ளார்.
“அண்ணாமலை கரூரில் நின்றால் டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் நிற்கி றார்” என்று கூறியிருக்கும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், “அண்ணா மலைக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேசத் தயாரா?” என்றும் சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியோ, “கரூர்காரரான அண்ணாமலை கரூரில் நிற்கா மல் கோவையில் நிற்கிறார். பாஜகவிற்கு 4 சதவிகித ஓட்டு கள் மட்டுமே உள்ளது. கூட்டணி யில் உள்ள பாமக, தமாகா கட்சி களுக்கு என்ன ஓட்டு உள்ளது? சிறப்பாக வேலை செய்தாலும் அவர்களால் 10 சதவிகித ஓட்டு வாங்க முடியுமா?” என்று கேட் டுள்ளார்.