சேலம், ஜூலை 21- அதிமுக ஆர்ப்பாட்டத் திற்கு வந்த இளைஞர், பணம் கேட்டதால் அவரை அதிமுகவினர் சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில், விலை வாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காலை 10.30 துவங்கி, சுமார் 2 மணி நேரத்திற்கு பின் நிறை வடைந்தது. இதற்கிடையில், ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ரூ.200 வழங்குவதாக கூறிதான் அழைத்து வந்துள்ளனர். ஆனால், பலருக்கு பணம் விநியோகம் செய்யப்படவில்லை. இந் நிலையில், சேலம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அதிமுக நிர்வாகிகளிடம் சென்று 200 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர். மேலும், சேலம் மாநகர் மாவட்டச் செய லாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டார். அப்போது சதீஷ், காரில் சாய்ந்தவாறு வெங்கடாசலத்திடமும் பணம் கேட்டார். இதனால் ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற அதிமுக நிர்வாகிகள், சதீஷை சர மாரியாக தாக்கினர். மேலும் சதீஷின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்று அப்புறப்படுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பர பரப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவரை, அதிமுகவினர் பணம் கேட்டார் என்பதற் காக, அவரை சூழ்ந்து கொண்டு சரமாரி யாக அடித்து, சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.