உதயநிதி ஸ்டாலின் சாடல் சேலம், பிப்.16- தமிழக கஜானாவை காலி செய்துவிட்டு சென்ற அரசுதான் அதி முக அரசு என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசு கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரி யம் இல்லை. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பின் பல்வேறு சாத னைகளை செய்து வருகிறது. குறிப் பாக, ரூ.5.75 லட்சம் கோடி கடன் பெற்று தமிழக கஜானாவை காலி செய்து சென்றது அதிமுக அரசு. ஆனால், அத்தகைய கடன் சுமையிலும், மூன்று மாதத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் நான்கு ஆயிரம் ரூபாய் திமுக அரசு நிவாரணம் வழங்கியது. மேலும், ஆவின் பால் விலை குறைப்பு, பெட் ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வரும் திமுக தலைமையி லான மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.