நாமக்கல், ஜூன் 23- பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என தேர்தல் நேரத் தில் பெருங்கூச்சல் போட்டவர் தேர் தல் முடிந்ததும், தன்னுடைய சேவை நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடையை சாத்தினார் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார். ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப் பினரும் பாஜக நிர்வாகியுமான, சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார். பாஜகவில் மாநில நிர்வாகியாக செயல்பட்டவர், அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்தவு டன், பாஜகவில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என தெரிந்த வுடன், அதிமுகவிற்கு தாவினார். கோடிக்கணக்கான சொத்துக் களை கொண்ட இவர் அதிமுக விற்கு வந்தவுடன் எதிர்பார்த்த தைப்போலவே ஈரோடு நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிட ஆற்றல் அசோக்குமாருக்கு வாய்ப்பு வழங்கியது அதிமுக. வேட்பு மனு தாக்கலின் போது 500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக காட்டி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி யாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு தகிடுதத் தங்களை மேற்கொண்டார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட் பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம் ,தாராபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கி பல்வேறு இடங்களில் சமூகப் பணிகளை மேற்கொள்வதாக நாடகத்தை அரங்கேற்றினார். பல்வேறு இடங்களில் பத்து ரூபாய்க்கு உணவு வழங்குவதாக வும், 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் கூறி, தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங் களில் மருத்துவமனையும், பிரதான சாலை பகுதிகளில் உணவகங்க ளையும் திறந்தார். (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, நூற்றுக்கணக்கான சேலை களை வாக்காளர்களுக்கு கொடுத்து கையும் களவுமாக பிடிபட்டது தனிக் கதை). பணத்தை வாரி இரைத்து போட்டியில் தான் முந்திக்கொண் டிருப்பதாக தோற்றத்தை உருவாக் கினார். இத்தனையும் மீறி உண்மை எது, பொய் எது என பிரித்துப் பார்க்கத்தெரிந்த ஈரோடு வாக்கா ளர்கள், ஆற்றல் அசோக்குமாரை தோல்வி அடையச்செய்தனர். ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாசிடம் ஆற்றல் அசோக்குமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து தனது சேவை நாடகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டா வது நாளிலேயே, ஆற்றல் அசோக் குமார் சார்பில் அமைக்கப்பட்ட உணவகங்கள், மருத்துவமனை கள் மூடப்பட்டு வந்தது. இதன்ஒருபகுதியாக வியாழ னன்று காங்கேயம் நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகை எதிரே இயங்கி வந்த ஆற்றல் மலிவு விலை உணவகத்தை காலி செய்து அங்கிருந்த பொருட்களை ஊழியர் கள் டெம்போவில் ஏற்றி சென்றனர். மேலும், நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் குட்டை முக்கு என்ற பகுதியில் முன்னாள் அமைச் சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான, தங்கமணி முன்னிலையில் ஆற்றல் மருத்து வமனை சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அவ்வப் போது மருத்துவமனை செயல் பட்டு வந்த நிலையில், மருத்து வமனையில் இருந்த ஊழியர்கள் உள்ளே இருந்த மருத்துவ உப கரண பொருட்கள், குளிர்சாதன பெட்டி, இரும்பு பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்க ளையும் டெம்போவில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து அங்கு இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்த பொழுது, மக்களின் நன் மதிப்பை பெற வேண்டும், அதை வாக்கு வங்கியாக மாற்றி நாடாளு மன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் நடத்தியுள்ளார். தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால், மக்களுக்காக திறக் கப்பட்ட உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகளை மூடி உள்ள தாக தெரிவித்தனர்.