திருப்பூர், பிப்.11- நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் தனித்தனியாக பிரிந்து போட்டியிட்டாலும், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி யில்தான் இருப்பதாக இரு கட்சி களின் தலைவர்களும் கூறியுள்ள னர். எனவே அதிமுக, பாஜக இரு கட்சிகளையும் மக்கள் தோற்க டித்து நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் கூறினார். இதுதொடர்பாக, திருப்பூர் மாந கராட்சி 28ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வீ.பாலசுப்பிரமணி யம் தேர்தல் பணிமனை திறப்பு விழா வில் பங்கேற்று கே.காமராஜ் பேசு கையில், நடைபெறுவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலாக இருந்தா லும், அதற்கு நேரடியாக சம்பந் தம் இல்லாவிட்டாலும் கூட, சில அர சியல் விசயங்களை நாம் மறந்து விடக் கூடாது. திருப்பூர் பின்ன லாடை தொழில் மட்டுமின்றி, கோ வை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட இந்த மாவட் டங்களில் ஜவுளித் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. சமீப கால மாக இந்த தொழில் அழிவைச் சந்திக் கும் வகையில் மிகவும் நெருக்க டியை சந்தித்து வருகிறது. தொழில் துறையினர் கடும் சிரமத்தில் உள்ள னர். இதற்கு முக்கிய காரணம் பருத்தி நூல் விலை உயர்வுதான். இந்த நூல் விலையை கட்டுப்ப டுத்தவும், குறைக்கவும் அதிகாரம் படைத்தது ஒன்றிய அரசுதான்.
ஆனால் ஒன்றிய அரசு நூல் விலையைக் குறைக்க எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி யினர் நூல் விலை உயர்வுக்கு மாநில அரசு மானியம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி திருப்பூ ரில் உண்ணாவிரதம் மேற்கொண் டனர். இவ்வாறு பிரச்சனையை திசை திருப்பி, இரட்டை வேடம் போடுவது பாரதிய ஜனதா கட்சி. இப்போதைக்கு நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக நின்று கொள்ளலாம் என்று பேசி அதிமுகவும் பாஜகவும் பிரிந்து நிற்கின்றன. ஆனால் இரு கட்சிகளின் தலைவர்களுமே அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதாகத்தான் கூறியுள்ளனர். தேர்தலில் இவர் கள் ஒருவேளை வெற்றி பெற்றால் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டு தவறான கொள்கைகளை தொடர்ந்து அமலாக்குவார்கள். எனவே மக்கள் இவர்களிடம் ஏமா றாமல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு வாக் களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கே.காமராஜ் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எம்.ரவி பேசுகையில், மேயர் பதவியை ஏலத்துக்கு எடுத்து அதி முக மேயர் வேட்பாளர் குணசே கரன் போட்டியிடுவதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது. அவர்கள் பணத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். ஆனால் நாம் ஜனத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம், என்று கூறினார்.