districts

img

கூட்டுறவு வங்கியில் பல லட்சம் மோசடி

நாமக்கல், டிச.19- திருச்செங்கோடு அருகே கோக் கலை கூட்டுறவு வங்கியில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ள தாக கூறி, அப்பகுதி விவசாயப் பெருமக்கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே எலச்சிபாளை யம் கோக்கலை கிராமத்தில்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கி கடந்த 40 வருடமாக இயங்கி  வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகள் நகைக்கடன், பயிர்  கடன், முன் வைப்புத் தொகை என பல்வேறு வகையில் வரவு செலவு வைத்து வருகின்றனர். இந்நிலையில், வங்கியில் பணிபு ரியும் வையப்பமலை தளவம்ப லத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ப வர் பல லட்சம் ரூபாய் பணத்தை  கையாடல் செய்ததாக, விவசாயி கள் குற்றம் சாட்டி முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, வந்த துணைப்பதிவாளர் இந்திரா, இதுகுறித்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்காத போராட்டக்காரர்கள், மாவட் டப் பதிவாளர் வந்து உத்தரவாதம் கொடுத்தால் தான் போராட்டம் வாபஸ் பெற முடியும் என்று கூறி னார்கள்.  இதைத்தொடர்ந்து, சம்பவ இடத் திற்கு நேரில் வந்த மாவட்ட இணைப் பதிவாளர் அருளரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடியாக தீர்வு  காணுவதற்கு கூட்டுறவு வங்கி வளாகத்தில் அதிகாரிகள் நியமித்து  அதற்கான விசாரணை துவக்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக, போராட்ட ஒருங் கிணைப்புக்குழு தலைவர் என்.ஆர்.என்.நடேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கந்த சாமி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட விவசாயப் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.