உடுமலை, நவ.19- கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் ஊரக வேலை திட்டத்தை நடைமுறைப் படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட்சியில் ஊரக வேலைத்திட்டம் நடைமுறைப் படுத் தப்படும் என்ற அறிவிப்பு இன்றுவரை செயல்படுத்தப் படாமல் உள்ளது. ஆகவே, ஊரக வேலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அப்பகுதி தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியு றுத்தி வெள்ளியன்று கொமரலிங்கம் பேருந்து நிலையத்தின் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் சி. சுப்பிரமணியம், தாலுகா செயலாளர் ஆர். வி.வடிவேல், தாலுகா விவசாய தொழிலா ளர் சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம், தாலூகா நிர்வாகிகள் ராஜரத்தினம், கருணா நிதி, பாலு, சுப்பிரமணி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.