districts

img

ஒன்றிய மோடி அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச்.7 நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய மோடி அரசை  கண்டித்து, அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் கிணத்துக்கடவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், சட்டத்திற்கு புறம்பாக புதிய  நிபந்தனைகளை விதித்து, பெரும்பகுதி யான தொழிலாளர்களுக்கு வேலை மறுப் பதை கைவிட வேண்டும். அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டுமென வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கிணத்துக்கடவு தாலூகா, வடசித்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு, விதொச கோவை மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி தலைமை தாங் கினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழ னிச்சமி, விதொச பொள்ளாச்சி தாலுகா தலை வர் பி.ஆனந்தராஜ் ஆகியோர் உரை யாற்றினர். இதில், திரளான விவசாய தொழி லாளர்கள் பங்கேற்று, மோடி அரசுக்கு எதி ராக முழக்கங்களை எழுப்பினர்.