districts

img

பாலியல் வன்கொலை விவகாரம்: விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், மே 1- பரமத்திவேலூர் அருகே பட்டதாரி இளம் பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண், கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று பாலியல் வன்கொலைக்கு உள்ளானார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் பரமத்திவேலூர் காவல் துறையினர், உரிய விசாரணை மேற் கொள்ளாமல், அப்பாவி சிறுவனை கைது செய்துள்ளதாகவும், எனவே உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். விசாரணை நடவடிக்கையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். அப்பாவி பொதுமக்களை மிரட்டி பொய் வழக்கு போடு வதை நிறுத்திவிட்டு, இந்த பாலியல் வன் கொலை வழக்கில் பொய்யாக குற்றச்சாட்டப் பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லாங்காடு வலசு பகுதியில் விவசாயி சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.தனேந் திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார். இதில் வழக்கறிஞர் என்.கார்த்திகேயன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி.பெரு மாள், மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராய ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளை யம் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமதி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். அப்போது போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.