districts

img

விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவர்கள்

கோவை, பிப். 5- தக்காளி மற்றும் தென்னை  விவசாயிகளுடன் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர் கள் கலந்துரையாடி விழிப்பு ணர்வு நடவடிக்கையில் ஈடு பட்டனர். அமிர்தா வேளாண் கல் லூரி மாணவர்கள் பல்வேறு  குழுக்களாக பிரிந்து விவசாயிகளிடம்  விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்தொடர்ச்சியாக, கோவை  மாவட்டம் பொட்டையாண்டிபுரம்பில்,  நான் காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாமினை மேற் கொண்டனர். இதில், தக்காளி சாகுபடியில்  ஈடுபட்டுள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்காதது குறித்தும், எவ்வாறு மதிப்புக் கூட்டி விற்பது என்பது குறித்து மாணவர் கள் விளக்கினர். இதேபோன்று, சிறுகலந்தையில் தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கத்தை மற்றொரு குழு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில், விவ சாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், வேரில் TNAU தென்னை  டானிக் கட்டுவது. இதை வருடத்திற்கு இருமுறை, ஆறு மாத இடைவெளியில் செய்து வருகையில், குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி அதிக காய்களைப் பெற்று 20  சதவீதம் வரை மகசூலை அதிகரிப்பது குறித்து விளக்கினர்.