கோவை, நவ.14- கனமழை காரணமாக கோவையில் உள்ள அக்ர ஹார சாமக்குளம் ஏரியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் நிறைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள அக்ர ஹார சாமக்குளம் பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏரி அமைந் துள்ளது. நீண்ட நாட்களாக சீரமைக்கப்ப டாமல் இருந்து வந்த இந்த ஏரியை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, அக்ர ஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர் கள் இணைந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமைகளில் சீரமைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அக்ரஹார சாமக் குளம் ஏரிக்கு 5 குளங்களின் வழியாக தண்ணீர் வரத்து அதிகரித்தததால், 28 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஏரி மழை நீரால் ததும்பி நிற்கிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் ்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.