districts

img

எல்ஐசி 66ஆம் ஆண்டு விழா: முகவர்கள் கொடியேற்றி கொண்டாட்டம்

திருப்பூர், செப். 1 - இந்திய மக்களின் மகத்தான நம்பிக்கையைப் பெற்ற,  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தொடங்கப்பட்டு  66 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திருப்பூரில் எல்ஐசி முக வர்கள் சங்கத்தினர் ஆண்டு விழாவை உற்சாகமாக கொடி யேற்றி கொண்டாடினர். திருப்பூர் ஜம்மனை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகம்  முன்பாக அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் திருப் பூர் கிளை சார்பில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப் பட்டது.  இந்த விழாவுக்கு கிளைத் துணைத் தலைவர் கண்ணன்  தலைமை ஏற்றார். கிளைத் துணைச் செயலாளர் தாமோத ரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர்கள் பா.ராஜேஷ், ப. குமார், கோட்டப் பொறுப்பாளர் வி.மணிகண்டன், இணைச்  செயலாளர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில்,  சங்கத்தின் திருப்பூர் கிளைத் துணைச் செயலாளர் மாலதி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் 60க்கும்  மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், எல்ஐசி ஊழியர்கள் அலுவலகத்திற் குள் 66ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.