தருமபுரி, ஏப்.9- மக்களவை தேர்தல் வாக்கு எண் ணிக்கை முடிந்து ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியமைக் கும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில் அரூர் ரவுண்டானா அருகே தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு திராவிடர் கழக காப்பாளர் ஆ. தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒருங்கிணைத்தார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “இன்னார்க்கு தான் இது’ என்கின்ற அடிப்படையில் மனு தர்ம ஆட்சி புரிவதே பாஜக – ஆர்எஸ் எஸ் மாடல். இந்தியா கூட்டணி வெற்றிய டைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றிய பாஜக அரசிட மிருந்து சுயமரியாதையை மீட்டெடுக் கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்கவும் இந்தியா கூட்ட ணிக்கு வாக்களிக்க வேண்டும். பெரும் பேரிடர் காலங்களில் தமிழ கத்திற்கு வராத பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிலேயே தங்கி விடுகிறார். தேசிய பேரிடரே ஒன்றிய பாஜக அரசு தான். அந்தப் பேரிடரை அடக்குவதற்கு தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்த முறை நாம் பாஜக அரசை தோற்கடிக்கா விட்டால் அடுத்த முறை இந்தியாவில் தேர்தலில் இருக்காது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்க போவது இந்தியா கூட்டணி தான் என் றார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில மகளிர் அணிச் செயலாளர் தக டுர் தமிழ்ச்செல்வி, இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, பேரூராட்சி தலைவர் இந்திராணி, மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன், திராவிடர் கழக பொதுச்செ யலாளர் துரை சந்திரசேகர், திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச்செ யலாளர் சா.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விசிக மாவட்டச் செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா, சிபிஐ மாவட்டச் செயலாளர் கே. கலைச்செல்வன், கொமதேக இன்மு ரசு கோபால் உட்பட பலர் கலந்து கொண் டனர்.