districts

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது…

நான் ஒருத்த ஓட்டு போட்டு என்ன சார்  பண்றது..... வடக்கெல்லாம் அவங்கதான் சார்... வேற ஆளே இல்லைங்க சார்., இப்படி யான சம்பாசனை ஒரு நண்பரிடம் இருந்து வந் தது. இப்படியாக நாம் நமது நண்பர்களிடத்தில் ஓட்டு கேட்கச் செல்லும் பொழுது சில அனுப வங்கள் நமக்கு கிடைத்திருக்கும்., நாம் அவர்களி டத்தில் இந்த 10 ஆண்டு காலத்தில் நடைபெற்ற  விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, பணமதிப்பி ழப்பு இன்னும் பல்வேறு விஷயங்களைப் பற்றி  பேசுவோம். ஆனாலும், “அதெல்லாம் சரிதான் சார்  மேல எல்லாம் அவங்க கரெக்டா செட் பண்ணி  வச்சிட்டாங்க சார்” என்று நமது நண்பர்கள் நமக்கு பதில் சொல்லும் விதத்தை பார்த்திருப்போம்., சில நேரங்களில் வருத்தமாக இருக்கும் சில  நேரங்களில் இவர்களை திருத்த முடியாது என்று  மனம் வெம்புவோம். இந்தியா முழுவதும் மோடி மட்டும்தான் ஒரே தலைவன் என்று ஒரு பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிம் பத்தை நொறுக்க, நாம் மக்களிடம் நெருங்கி சென்று விளக்கினால் புரிந்து கொள்வார்கள். ஆனால், கஷ்ட காலம் நாம் ஒவ்வொரு காதிலும் சொல்ல வேண்டும் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பினால் இந்த குரூப்பில் அரசியல் பேச வேண்டாம் என்று ஒரு பிஜேபி காரன் கதறுவான். இதையெல்லாம் தாண்டி ஏதாவது ஒரு வகையில் நமது பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தால் தொலைக்காட்சிகளும் சில பத் திரிகைகளும் ஊது குழலாகவே மாறி மோடிக்கு  பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தி யாவில் இருக்கும் பெரும் பகுதியான தொலைக் காட்சி நிறுவனங்களும் சமூக வலைதளங்களும் மோடியின் ஆதரவு பெற்ற அதானிகளுக்கும், அம் பானிகளுக்கும் சொந்தமாக போய் உள்ளது யூடியுப் சேனலில் சில மட்டுமே உண்மையான செய்திகளை கொடுத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் அந்த சேனல்களுக்கு மோடியின் அர சும், பாஜகவினரும் நெருக்கடிகளையும், மிரட்டல் களையும் கொடுத்து ஒடுக்க நினைக்கிறது, ஒடுக் குகிறது.

விலைவாசி உயர்வைப்பற்றி நடுத்தர மக்களி டமோ அல்லது சிறு தொழில் அதிபர்களிடமோ பேசி னால், விலைவாசி உயர்வு எல்லாம் இப்பொழுது சர்வதேச நிலைமை ஆகிவிட்டது என்று பதில் அளிப்பார்கள், அல்லது என்ன செய்வது சார் என் பார்கள். இந்த 10 ஆண்டுகளில் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், தங்களின் உழைப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. நடுத்தர மக்கள் வீட்டுக் கடனிலும் கிரெடிட் கார்டு கடன்களி லும் வேறு பல மாதாந்திர இஎம்ஐ களிலில் சிக்க வைத்துள்ளனர். எந்தவிதமான சிந்தனையும் வரக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு கடன் வலையில் சிக்கவைக்கப்படுகிறது.  நாட்டில் சில தொழிலதிபர்கள் தங்கள் சொத்து  மதிப்பை சமீபத்தில் இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கின்றார்கள். இது எப்படி என்று நண்பர் இடத்தில் கேட்டால், அவர்களின் திறமை என்கி றார். திறமைக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். பாஜக துவக்கப்படாத பல நூறு ஆண்டுக ளுக்கு முன்பே நமது கிராமத்து பழமொழி, ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என் றும், நமது பெயர்களில் ராமகிருஷ்ணனும், பால கிருஷ்ணனும் சீதாவும் வந்து போய்க் கொண்டி ருக்கின்றார்கள். ஏதோ இவர்கள்தான் புதிதாக ராமரை கண்டுபிடித்தது போல ஒரு மிகப்பெரிய விளம்பர பிம்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த பாஜக மட்டும்தான் ராமரை தாங்கிப் பிடிப்ப தாகவும் மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் அதை  எதிர்ப்பதைப் போன்ற ஒரு மாய பிம்பத்தையும் தங்களது தொலைக்காட்சி மற்றும் சமூக வலை தளங்களில் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள். அது உண்மையா? இந்திய திருநாடு முழுவ தும் எந்த கடவுளை யார்  வேண்டுமானாலும் வணங் கிக் கொள்ளலாம் மற்றவரிடத்தில் அதை வற்பு றுத்தி மதத்தை திணிக்க கூடாது என்று அந்த நண்பரிடம் கூறினால், சார் அது எப்படி சார் , அவங்க அவங்க இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும், என்று ஆழ்  மனதில் உள்ள சாதி வெறியை பிரதி பலிக்கிறார். பிஜேபி மட்டும் தாங்கள் தான் இந் துக்களின் ஒரே பாதுகாப்பு என்ற வகையில் மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டு கொண்டே உள்ளது.  இந்திய நாடு முழுவதும் எத்தனையோ தலை வர்கள் இருக்கிறார்கள் பல வெளிநாடுகளில் படித்த அருமையான சிந்தனை சிற்பிகளை கொண் டுள்ள நாடு இந்திய நாடு, இங்கு அறிவாளிக ளுக்கு பஞ்சம் இல்லை மிகச்சிறந்த நிர்வாக அமைப்பை கொண்டுள்ள பல்வேறு கட்சித் தலை வர்கள் கொண்ட நாடு., திடீர் திடீர் என்று மக்க ளுக்கு முரணான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற புதிய திட்டங்களை அறிவிக்கும் மோடியை போன்று ஒற்றைத் தலைவரை கொண்ட  நாடு அல்ல.  மோடி மிகப்பெரிய நிர்வாகி என்றால் ஏன் குஜ ராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிர தேசம், பீகார், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களில் இருந்து தென்னகத்திற்கு வேலைக்கு வரும் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருக் கின்றது என கேட்டால். அதற்கும் நமது பொது ஜனம் பதில் வைத்திருக்கின்றான் அங்கெல்லாம் முன்ன மாதிரி இல்ல அங்கயும் நிறைய கம்பெனி எல்லாம் வந்துட்டுதான் இருக்கு சார்… இதெல்லாம் மீடியாக்கள் நமது பொதுமக்க ளின் மனதுக்குள் வைத்திருக்கும் நஞ்சுக்கள், இந்த நஞ்சை, மாய பிம்பத்தை அகற்ற நாம் போராடி யாக வேண்டும். 

இந்தப் பத்து ஆண்டுகளில் நேரடியாக எந்த ஒரு செய்தியாளர்களையும் மோடி சந்தித்தது இல்லை. நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான கேள்வி நேரத்தில் பதில் அளிப்பதில்லை. நாடாளு மன்றத்திற்கே வருவதில்லை.  நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்த துறைமுகங்கள், விமான நிலையங்கள், விமானங்கள் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவ னங்கள் போன்றவற்றை தனது நண்பர்களுக்கு விற்று இருக்கின்றார், இதையெல்லாம் சொன் னால், நஷ்டம் வந்தால் விற்று விட்டுத்தான் சார்  ஆகணும், அதுதானே சார் நல்ல நிர்வாகம் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் மாய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார் கள்.  நான் சொல்வதை எதுவும் நீங்கள் கேட்கும் நிலைமையில் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன், ஒருவேளை மோடி மீண்டும் பிர தமர் ஆனால்,  நீங்களோ அல்லது உங்கள் பிள்ளை களோ வாக்குச்சாவடிக்கு சென்று கடைசியாக போடும் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்.. சார் அப்படியெல்லாம் எதுவும் ஆகாது சார் பாத்துக்கலாம் சார் என்றார். (நான் தலையில் அடித் துக் கொண்டேன்) இந்த உரையாடலின் இறுதியாக ஒன்றை ஒன்றை தான் கேட்டேன்..... சரி சார் நீங்க இப்ப வைத்திருக்கும் வீடு, கம்பெனி, மொத்த நில புலன்கள் எல்லாம் காங் கிரஸ் ஆட்சியில் வாங்கியதா மோடி ஆட்சியில் வாங்கியதா என்று கேட்டேன்... பெருமூச்சு விட்டார்... சார் இந்த நாலஞ்சு வருஷமா பொழப்பு நடத்தவதே பெரிய சிரமமா இருக்குது... சார்  உங்களுக்கு தெரியாதா......பேங்க் வட்டி ஏறிடுச்சு, டியூ கட்ட முடியல, வீட்டுக்கு பணம் கொடுக்க முடியல, சொந்த செலவு செய்வதற்கு கூட  யோசிக்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளுக்கு படிப்பு செலவு கூட பணம் பத்த மாட்டேங்குது..... இப்படியாக தனது மனக்குமுறலை வெளிப் படுத்தினார்.... நான் மாய பிம்பத்தை விலக்கி அவருக்கு சொன் னேன் சார் காங்கிரஸ் ஆட்சியில் தொழில் முடங்கி னால் சிறு தொழிலும் முடங்கும் பெருந் தொழி லும் முடங்கும். தொழில் வளர்ந்தால் சிறு தொழி லும் வளரும் பெரு நிறுவனங்களும் வளரும். ஆனால், இப்போது அப்படி அல்ல பெரும் தொழில்கள் வளர்ந்து கொண்டே தான் இருக் கின்றது. சிறு தொழில்கள் மட்டுமே தனது நிலையை இழந்து கொண்டிருக்கின்றது என் றேன். அவரும் ஆமோதித்து கொண்டு ஆமாம் என் றார். எனக்கு மனதில் நிம்மதி வந்தது.  விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தர மாகாது, உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது..... காலத்துக்கேற்ற மிகச்  சிறந்த பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளை மன தில் முணுமுணுத்துக் கொண்டே சென்றேன்... -சி.தனபால் (எ) பாபு