districts

img

பேருந்து நிறுத்த கட்டிடத்தை மறைக்கும் விளம்பர போர்டுகள்

உடுமலை, டிச.27- எலையமுத்தூர் பிரிவு பேருந்து நிறுத்த கட்டிடத்தை மறைக்கும் அளவிற்கு விளம் பர போர்டுகள் வைக்கப்பட் டுள்ளது. நீதிமன்ற உத்தரவை  மீறி விளம்பர போர்டுகளை வைத்தவர்கள் மீது குற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை நகராட்சி எல்லைப் பகுதியான  எலையமுத்தூர் பிரிவு பேருந்து நிறுத்த பகு தியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் அரசு கலைக் கல்லூரி உள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும்  மாணவ, மாணவியர்கள், சிறு பஞ்சாலைக்கு  செல்லும் மில் தொழிலாளர்கள் எனத் தினதோ றும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் பேருந்து நிறுத்த கட்டிடத்திற்குள் யாரும் செல்ல முடியாத வகையில் விளம்பர  போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விளம்பர போர்டுகள் வைக்க கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும்,  சட்ட விதிகளுக்கு மீறி விளம்பர போர்டுகள்  வைத்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளார்கள்.