districts

img

பேருந்துகளை இயக்க உறுதியளிப்பு; சிறை பிடிப்பு போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர், ஆக. 21- திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்களை இயக்கு வதாக அரசு அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்த பேருந்துகள் சிறைப்பிடிப்பு போராட் டம் ஒத்தி வைக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர், வாவிபா ளையம், சேடர்பாளையம், கணக்கம் பாளையம், பூலுவபட்டி, நெருப்பெ ரிச்சல், வெங்கமேடு ஆகிய பகுதிக ளில் போதுமான பேருந்துகள் இயக் கப்படாததால் பள்ளி மாணவ, மாண வியகள் கல்வி பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பணிக்கு செல்வ தற்கும் சிரமப்படுகின்றனர்.  கொரோன பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண் டும் முழுமையாக இயக்க வேண்டும். மாணவ மாணவிகளின் பள்ளிக்கு செல்ல ஏதுவாக பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசு பள்ளிக ளுக்கு காலை மற்றும் மாலை கூடுதல்  பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் ஆகஸ்ட் 22ஆம் தேதி  இப்பகுதிகளில் பேருந்து சிறைபி டிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர்  ஆர்.காளியப்பன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திங்களன்று திருப் பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத் தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியினருடன், போக்கு வரத்துத் துறை அலுவலர்கள், வட் டாட்சியர் மற்றும் காவல் துறையினர்  பங்கேற்றனர்.  இதில் புதிய பேருந்து நிலையத் தில் இருந்து மாலை நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்கப் படுவதில்லை. 6, 6எ, 6பி, 46எ ஆகிய  பேருந்துகளை மீண்டும் இயக்க  வேண்டும், வழித்தட எண் 101 மற்றும்  102 ஆகிய சுற்று வட்ட பேருந்துகளை அதன் வழிதடங்களில் முழுமை யாக இயக்க வேண்டும். கணக்கம்பா ளையம், பெருமாநல்லூர் அரசு பள் ளிகளுக்கு போதுமான பேருந்து கள் இயக்குவது உள்ளிட்ட ஒன்றியத் திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும், பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் போகும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தினர்.

 இதற்கு பதில் அளித்த திருப்பூர்  வடக்கு வட்டார போக்குவரத்து அலு வலர் எம்.ராஜேந்திரன் கூறுகை யில், 6 ஆம் எண் பேருந்து நாள் ஒன்றுக்கு 8 முறையும், 6எ பேருந்து 16  முறையும் இயக்கப்படுகிறது. 6பி பேருந்து போதுமான பயணிகள் இல் லாததால் 6 மாதத்திற்கு முன்பு நிறுத் தப்பட்டது. 101 ஆம் எண் பேருந்து முறையாக இயக்கப்படுகிறது. இது  தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் படும். பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லாத பேருந்து எண், நேரம், வழி தடம் குறிப்பிட்டு சொன்னால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு  காண செப்.8 ஆம் தேதி வரை கால  அவகாசம் தேவைப்படும் என்று  தெரிவித்தார். செப். 8 ஆம் தேதிக்குள்  நடவடிக்கை எடுக்காவிட்டல் தொடர் மறியல் போரட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு வட்டாட்சி யர் சு.மகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை யில், வடக்கு வட்டார போக்குவரத்து  அலுவலர் எம்.ராஜேந்திரன், அரசுப்  போக்குவரத்து கழக உதவி மேலா ளர் எம்.வேல்முருகன், அனுப்பர்பா ளையம் காவல் ஆய்வாளர் கே. பிரமா, பூண்டி துணை ஆய்வாளர் ப. செல்வராஜ் ஆகியோரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாவட்டச் செயலாளர் செ.முத்துகண் ணன், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பி.கே.கருப்பசாமி, பி.மகா லிங்கம், பெருமாநல்லூர் கிளை செய லாளர் ஜி.சண்முகம், ஆதியூர் எம்.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.