districts

img

இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் பிரச்சாரம்

நாமக்கல், ஏப். 10- நாமக்கல் நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட ராசிபுரம், நாமக்கல் பகு திகளில், ஆதித்தமிழர் பேரவை யின் சார்பில் இந்தியா கூட்டணி  திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய வேட்பாளர் கொங்குநாடு மக் கள் கட்சி சேர்ந்த வி. எஸ்.மாதேஸ்வ ரன் அவர்களுக்கு உதயசூரியன் சின் னத்தில் வாக்களிக்க கோரி பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று  பேசிய ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அதியமான்  பேசுகையில், அருந்ததிய மக்க ளுக்கு மூன்று சதவிகித விழுக்காடு உள் இட ஒதுக்கீடு,  தூய்மை தொழி லாளர் நல வாரியம்,  அருந்ததியர் சமூ கத்தினுடைய வரலாற்றுத் தலைவர் கள், மாமன்னர் ஒண்டிவீரன், வீர மங்கை, குயிலி, தளபதி ஒண்டிவீ ரன் ஆகியோருக்கு நினைவுச் சின் னங்களை அமைக்க உத்தரவிட்டது எல்லாம் திமுக அரசுதான். குறிப்பாக  உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு அருந் ததியர் சமூகத்தில் நூற்றுக்கணக் கான மருத்துவர்கள் ஆயிரக்க ணக்கான பொறியாளர்கள், நீதி பதிகள், இடைநிலை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு  அதிகாரிகள் என்று ஆயிரக்க ணக்கான நபர்கள் உருவாகி உள் ளனர். அனைத்து நிலைகளிலும் பின் தங்கி இருந்த அருந்ததியர் சமூகம்  இன்றைக்கு   கல்வி வேலை பொருளா தாரம் முன்னேறி இருக்கிறது என்று  சொன்னால் அதற்கு அடிப்படை யாக இருந்தது அருந்ததியர் சமூ கத்திற்கு திமுக அரசு வழங்கிய உள்  இட ஒதுக்கீடு ஆகும்.  தூய்மை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக தூய்மை தொழிலா ளர் நல வாரியம் அமைத்தது, தூய்மை தொழிலாளர் நல வாரியத் தின் துணைத் தலைவராக ஒரு அருந் ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நியமனம் செய்தது, தூய்மை தொழிலாளர்களின் பொரு ளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது, தூய்மை தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் வீட்டு மனை  பட்டாக்கள் அடுக்குமாடி குடியிருப் புகள், சமூக நலக்கூடங்கள் அமைத் துக் கொடுத்தது,  தமிழ்நாடு முதல்வர்  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள்தான்.  அதேபோன்று, விஷவாயு மர ணங்களை தடுத்திட அனைத்து மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளி லும்  இயந்திரங்களை வாங்க நிதி  ஒதுக்கீடு செய்தது உள்ளிட்ட திட் டங்களை நிறைவேற்றி தூய்மை  தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட  திட்டங்களை செயல்படுத்திய அரசு  திராவிட முன்னேற்ற கழக அரசு.  திமுக ஆட்சி வந்த பிறகு மதிவேந் தன் அவர்களுக்கு அமைச்சர் பதவி  வழங்கி அருந்ததியர் சமூகத்திற்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகா ரத்தை வழங்கியவர்  தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் எனவே கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என்று அனைத்து வகையிலும் அருந் ததியர் முன்னேற்றத்திற்கு பல்வேறு  சாதனை திட்டங்களை  உருவாக்கிக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழ கத்தின் வேட்பாளராக  கொங்கு நாடு  மக்கள் கட்சி சேர்ந்த வி எஸ் மாதேஸ் வரனுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த பிரச்சார கூட்டத்தில் நாமக் கல் நாடாளுமன்ற  உறுப்பினர் ஏ.கே. பி.சின்ராஜ், ராசிபுரம் நகரச் செயலா ளர் என்.ஆர். சங்கர் , ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், மாவட்டச் செயலாளர் மணிமாறன், கொங்கு நாடு மக்கள் கட்சியின் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர் சந்திரசேகர் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.