districts

img

கோவையில் 4ஜி சேவை - பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை, நவ.29- கோவை மாவட்டத்தில் பிஎஸ் என்எல் 4ஜி சேவையை விரைந்து துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆ.ர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.  கோவை மாவட்ட தொலைத் தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் சாய்பாபா காலனி பகுதியில் புத னன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, பி.ஆர்.நடராஜன் எம்பி., தலை மையேற்றார். இதில், பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளர் வ.சங் கர் வரவேற்புரையாற்றினார். கடந்த கூட்ட ஆய்வறிக்கையை நிர்வாக துணை பொது மேலாளர்  ரா.பால் வண்ணன் முன் வைத்தார். இத னைத்தொடர்ந்து, ஆய்வறிக்கை யின் மீது மாவட்ட தொலைத்தொ டர்பு ஆலோசனை குழு உறுப்பி னர்களின் விவாதம் நடைபெற்றது.  பின்னர். கோவை மாவட்டத்தில் பிஎஸ் என்எல் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவது குறித்து  விவாதிக்கப்பட்டது. கோவை மாவட்ட பகுதியில் வரும் புத்தாண்டு முதல்  4ஜி துவங்கிட நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவி கள் குறித்த ஆய்வு 95 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளதாகவும், பஞ் சாப் மாநிலத்தில் பிஎஸ்என்எல் 4 ஜி துவங்கி விட்டது. விரைந்து ஆய்வு கள் முடித்து கோவையிலும் துவங் கப்பட உள்ளதாக முதன்மை பொது மேலாளர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பி.ஆர்.நட ராஜன் எம்பி., பேசுகையில், கோவை யில் 4 ஜி சேவை துவங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். பிஎஸ்என்எல் வழங்கி வரும் பைபர் நெட்வொர்க் இணைய இணைப்பு  சேவை திட்டத்தை அனைவரும் பயன் படுத்திட வேண்டும். இத்திட்டம் குறித்து இன்னும் கூடுதலாக விளம் பரப்படுத்திட வேண்டும், என்றார்.