districts

பால், தென்னை விலை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், அக். 30 - பால் உற்பத்தியாளர்களுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் விளை பொருளுக்கு விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க  பொருளாளர் எஸ்.பரமசிவம் பேசும் போது, தமிழகம் முழுவதும் ஒவ் வொரு மாவட்டத்திலும் பால் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்கக்  கோரி விவசாயிகள் போராடி வரு கின்றனர். பால் விலை குறைகிறது. ஆனால் தீவனங்கள் விலை உச்சக் கட்டமாக உயர்ந்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் இப்போது விலை தருவார்கள், ஆனால் திடீரென ரூ.5  வரை குறைத்து விடுவார்கள். எனவே  பாலுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும். ஆவின், பால் உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள், தனியார் பால் நிறுவனங்கள் கொண்ட முத்த ரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். பால் விலையை உயர்த்தி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தென்னை விலையும் மிக மோசமாக உள்ளது.

தேங்காய்க்கு  விவசாயிக்கு விலை கிடைப்பதில்லை. அதே சமயம் தேங்காய் விற்பனை விலைக்கும், தேங்காய் எண்ணெய் விலைக்கும் சம்பந்தமே இல்லை. தேங்காய் எண்ணெய் குறைவான விலையில் விற்பனை செய்கிறார்கள். கலப்படம் செய்யாமல் சுத்தமான தேங்காய் மூலம் எண்ணெய் உற்பத்தி  செய்து இந்த விலைக்குத் தர முடி யாது. மக்கள் ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது என்பதால் கலப்படத்தைத் தடுக்க வேண்டும். அதேபோல் தென்னை மட்டை விலையும் குறைந்து விட்டது. தேங்காய் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு கொள் முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தென்னை விவ சாயம் நடைபெறுகிறது. பிரதமர் கிஷான் திட்டத்தில் நிதி தருவதாக  சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஐந் தாறு மாதங்களில் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. தேங்காய் லாபி மிகப்பெரிய அளவுக்கு உள்ளது. கொப்பரை கொள்முதல் மிகக்குறைவாக செய்யப்படுகிறது. 90 சதவிகிதம் கொள் முதல் செய்வதில்லை. 10 சதவிகிதம் மட்டுமே செய்யப்படுகிறது. பால், தேங்காய் மூலம் பல ஆயிரம் விவசாயி கள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் பேசும்போது, கூட்டுறவுக் கடன்  தள்ளுபடி ஆனவர்களுக்கு பங்குத் தொகை தருவதில்லை. அத்துடன் 10  சதவிகிதம் வட்டித் தொகையும் கட்ட  வேண்டும் என்றால் அடமானம் போகும்  நிலை ஏற்படுகிறது. அருகாமை கிராம சங்கங்களில் கடன் கிடைக்காது என்பது  சரியானதல்ல. உரிமைச் சான்று பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். வாழவாடியில் 25 ஏக்கர் கோயில் நிலம்  மோசமான சீமைக்கருவேல மரம், விஷப் பூச்சிகள் உள்ளன. அத்துடன் அங்கு சட்டவிரோத செயல்களும் நடை பெறுகின்றன. அந்த நிலத்தை குத்த கைக்குக் கொடுத்தால் கோயிலுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக் கும். கால்நடை மருத்துவமனைகள் காலை தொடங்கி மதியம் முடித்துக் கொள்வது சரியல்ல. காலை, மாலை இரு வேளையும் செயல்பட வேண்டும் என்று கடிதம் கொடுத்தால், அதை படித்துப் பார்க்காமலேயே அந்த துறை அதிகாரிகள், காலை மட்டும் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக பதில் அளிக்கின்றனர். 

நெல் ஈரப்பதம் 22 சதவிகிதம் இருக் கலாம் என நிர்ணயித்துத் தரும்படி  முதல்வர் உள்பட ஒன்றிய அரசுக்கு  கடிதம் எழுதி கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு  வெளியிட்ட அறிவிப்பில் 19 சதவிகிதம்  ஈரப்பதம் என நிர்ணயித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விவ சாயிகள் புகார் தெரிவித்தால் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. வாழவாடியில் கோபால கிருஷ்ணன் என்ற விவசாயி ஒரு புகார்  தெரிவித்ததற்காக அவரது நிலத்தின்  ஒரு பகுதியில் வேலி அமைத்து உடு மலை ஒன்றிய பிடிஓ பழிவாங்குகிறார். ரோடு போடுவதில் ரூ.10 லட்சம் ஊழல்  நடைபெற்றுள்ளது என்று புகார் கூறியதற்காக ஒன்றிய பிடிஓ இது போல்  செய்கிறார். இந்த ஊழல் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்கள் சிண்டி கேட் அமைத்துக் கொண்டு தென்னை விலையை தீர்மானிக்கின்றனர். இத னால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு தென்னை விவசாயிகளுக்கு ரூ.28 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையும் வீழ்ச்சி அடைந் துள்ளது, வெங்காயமும் பெரும் பாதிப்பு. பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் எந்த  அமைப்பாக இருந்தாலும் தவறான தகவல், செய்தியைப் பரப்பினால் அதற்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவிக்க  வேண்டும். அதைத் தடுக்க வேண்டும். அரளி வாய்க்கால் பிரச்சனைக்கு தீர்வு  காண வேண்டும்.  இக்கூட்டத்தில் தனிநபர் பிரச்சனை களைப் பேசுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விவசாயி களைப் பாதிக்கும் பொது பிரச்சனை களை, விவசாய அமைப்புகள் தெரி விப்பதற்கு முன்னுரிமை அளிக்க  வேண்டும். அதேபோல் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வேண்டும். விவசாயிகள் அமர்வதற்கு வசதியான மேல் இரண்டாவது தளத் தில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எங்கள் நிலத்தை அரசு திருடிவிட்டது

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசிய தாவது:- என்.கே.திருமலைசாமி: யூரியா  மிக அதிகமாக 350 ரூபாய்க்கு விற் கிறார்கள். கடைகளை ஆய்வு செய்து  அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்ய வேண்டும். நீரா பெரியசாமி: குடிமங்கலத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். பிஏபி பாச னத்தில் ஒரு மண்டலத்தில் நான்கு சுற்று  ஐந்து நாட்கள் வீதம் மொத்தம் 20 நாட்கள் தண்ணீர் விடப்படுகிறது. இதில்  என்ன  மாதிரி வெள்ளாமை செய்ய  முடியும் என விதையைக் கண்டுபிடித்து  தர வேண்டும் அல்லது விவசாயிகள் பயன்படுத்துவதற்கு உரிய தண்ணீர் விட வேண்டும் என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேசும்போது, கோவையில் தற்போது கார் வெடித்ததில் 73 கிலோ வெடி மருந்து இருந்ததாக என்ஐஏ ஆய்வு சொல்கிறது. ஆனால் திருப்பூர் மாவட் டத்தில் 10ஆயிரம் கிலோ வெடி மருந்து  சட்டவிரோதமாக சப்ளை ஆகிறது.  எப்படி வந்தது, யார் வெடிமருந்து  கொடுத்தார்கள் என்பதை கண் காணித்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கேயம் நால்  ரோடு திட்டுப்பாளையம் சிவியார் பாளையத்தில் கிராவல் மண் கொள்ளை நடைபெறுகிறது. ஆனால்  இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் அரசு சொத்தைப் பாது காக்க நடவடிக்கை இல்லை. அங்குள்ள  சிவா புளூமெட்டல் சட்டவிரோதமாக மண் அள்ளி இருக்கிறார்கள் என்றார். அதேபோல் சென்னிமலை காங் கேயம் சாலை பரஞ்சேர்வழி திட்டுப் பாறை அருகே 50 ஆண்டுகள் பழமை யான மூன்று மரங்கள் வெட்டப்பட் டிருக்கிறது. இதை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குளிர்பான ஆலைக்கு எதிர்ப்பு

மேற்குப்பதியைச் சேர்ந்த சுமார் 25  பேர் சார்பில் விஜயசேகர் என்பவர்  பேசியபோது, திருப்பூர் வடக்குப்  பகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளில் தான் விவசாயம் நடைபெற்று வரு கிறது. மேற்குப்பதியில் சுற்றிலும் விவ சாய நிலங்கள் இருக்கும் பகுதியின் மையத்தில் சோடா கம்பெனி வரு கிறது. அந்த ஆலையை மூட வேண்டும்.  அதன் அனுமதியை ரத்து செய்து கடிதம்  கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த  ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால் பொருட்கள் எல்லாம் அங்குதான் வைக்கப்பட்டுள்ளன.  இத னால் சுற்றிலும் ஆறு ஊராட்சிகள் பாதிக் கப்படும். ஆனால் வெளியாட்களை அழைத்து வந்து மனுநீதி நாளில் ஆலை யைத் திறக்க வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் என்று மனுக் கொடுக்கிறார்கள். எனவே அந்த ஆலைக்கு நிரந்தரமாக  சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் பேசிய கருப்பசாமி, சாமளாபுரம் 1ஏ1 ஓடையைத் தூர்வாரி  ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பட்டா மாறு தலுக்கு 15 நாட்கள், உட்பிரிவு செய் வதற்கு 30 நாட்கள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய விண்ணப்பங்கள் உள்ளன என  சொல்லி காலதாமதம் செய்யப்படு கிறது. பழைய விண்ணப்பங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து  அவற்றை முடிக்க வேண்டும். அத் துடன் ஆன்லைன் விண்ணப்பங்கள் பற்றி அந்தந்த வட்டாட்சியர் அலுவல கங்களில் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டனர். திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் பொதுக் கழிப்பிடத்தை முறையாக பராமரித்து பயன்படுத்த ஏற் பாடு செய்ய வேண்டும்.

மண்ணரை நில எடுப்பு

மண்ணரை கிராமத்தைச் சேர்ந்த  சுரேஷ்குமார் என்பவர் கூறியதாவது: மண்ணரை பகுதியில் ரயில்வே மேம் பாலம் அமைப்பதற்கு எங்களுக்கு உரிய இடத்தில் 48 குடும்பங்களுக்கே தெரியாமல் நில அளவை செய்து உட் பிரிவு செய்திருக்கிறார்கள். எங்க ளுக்கு இழப்பீடு தரவில்லை. 12 வருட மாக இப்பிரச்சனை நீடிக்கிறது. ஆரம் பத்தில் ஒரு சென்ட் ரூ.1.40 லட்சம்  இழப்பீடு தருவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது ஒரு சென்ட்டிற்கு  ரூ.27ஆயிரம் தருவதாக சொல் கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து இருக்கும் எங்கள் நிலத்தை எங்களுக்கே தெரியாமல் அரசு திருடி விட்டது என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாவட்ட  வருவாய் அலுவலர் ஜெய்பீம், உங்கள்  இடத்திற்கு இழப்பீடு தருவது பற்றி முதலில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அப்போது நீங்கள் வரவில்லை. எனவே கட்டாய நில கையகப்படுத்துதல் முறையில் அங்குள்ள இடம் எடுக்கப்பட்டு விட்டது.  உங்களுக்கு உரிய பணம் தனியாக இருப்பில் உள்ளது. இதற்கு மேல் உங்கள் பிரச்சனையை நீங்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்