districts

img

அடிப்படை வசதிக்கு ஏங்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தருமபுரி, ஆக.9- இலங்கை தமிழர்கள் முகா மில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றமாறு கோரிக்கை விடுத்துள் ளனர்.  தருமபுரி மாவட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சி  தமிழகத்திலேயே மிகப் பெரிய ஊராட்சியாகும்.  இந்த ஊராட்சி யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் தலைமை அலுவலகங் கள் அமைந்துள்ளன. 27 குக்கிராமங் களைக் கொண்ட இந்த ஊராட்சியில் சத்யவான் நகர் அமைந்துள்ளது. இந்த  சத்தியவான் நகரில் 1981 ஆம் ஆண்டு  இலங்கையில் இருந்து வந்த 26 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர்.  இலங்கையிலிருந்து வந்த பொழுது தருமபுரியில் இலக்கியம்பட்டி ஊராட்சி  சத்தியவான் நகரில் அரசு சார்பில், பல் வேறு போராட்டங்களுக்குப் பிறகு இடம் வழங்கப்பட்டது. இம்மக்கள் கூலி  வேலை செய்து வீடுகள் கட்டி வசித்து  வருகின்றனர்.

ஆனால், இக்கிராமத் தில் கழிவு நீர் கால்வாய், சாலை உள் ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மேலும், மாவட்டம் முழுவதும் குடி நீர் குழாய் அமைத்து, தேவையான  இடங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வரும்  நிலையில், இப்பகுதியில் மட்டும் குடிநீர் குழாய் அமைக்கப்படாவில்லை. ஒரே  இடத்தில் சிறிய தண்ணீர் தொட்டியில் இருந்து, தண்ணீர் பிடித்து வருகின் றனர்.  கழிவுநீர் கால்வாய் வசதி அமைக் கப்படாததால், மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில்  மழைநீர் நுழைந்து விடுகிறது. இதனால்  இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக் குள்ளாகி வருகின்றனர். மேலும் குடும்ப  அட்டைதாரர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தோக் கம்பட்டி செல்வதால், பொருட்கள் முழு வதுமாக கிடைப்பதில்லை. இந்நிலையில், தங்களின் பிரச்ச னைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றத்  தலைவர் உள்ளிட்ட அரசு நிர்வாகங் களில் கோரிக்கை மனுக்கள் கொடுத் துள்ளனர். அரசு அதிகாரிகள் நேரில்  வருவதாகவும், ஆய்வு செய்வதாகவும்  தெரிவிக்கிறார்களே தவிர, இந்த பகுதிக்கு வருவதும் இல்லை. தங்களது  தேவைகளை பூர்த்தி செய்வதுமில்லை. இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதால், இவர்களின் மனுக்களின் மீது அலட்சியம் காட்டி வருவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர். எனவே, சத்தியவான் நகருக்கு முறையான சாலை, கழிவுநீர் வசதி,   அதேபோல் பிரதம மந்திரி ஜல் சக்தி  அபியான் திட்டத்தின் கீழ், குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும். மேலும் நட மாடும் ரேசன் கடைகள் மூலம் பொருட் களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.