நாமக்கல், ஆக.17- பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளது. அவ் வாறு வந்த போலி முகநூல் மற்றும் டுவிட் டர் கணக்குகளில் அப்பொழுது ஆபாச புகைப்படங்களும், ஆபாச பேச்சுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அந்தப் பெண்களின் கணவர்களுக்கு பரவியதால் அதிர்ச்சியடைந்த கணவர்கள் குமாரபாளை யம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீ சார் அதேகிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீ சார் விசாரணை செய்த பொழுது, போலி முக நூல்கள் மற்றும் ட்விட்டரில் மூலம் ஆபாச உரையாடல்கள் பதிவு செய்தது முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகே சனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட முரு கேசன் உடனடியாக ஜாமீன் பெற்று வெளியே வரக்கூடாது என்பதற்காக முருகேசன் மீது போக்சோ மற்றும் குண்டர் தடுப்புச் சட்டங் களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லங்காட்டுவலசு பேருந்து நிறுத்த பகுதியில் பெண்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர் வாகி தனேந்திரன் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெரு மாள் கண்டன உரையாற்றினார். அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள், குற்றவாளியை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கண்டன முழக் கங்களை எழுப்பினர்.