உடுமலை, ஏப்.25- தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் உடுமலை மின் வட்ட நிர்வாக அலுவலர் கந்தவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மின்வாரிய அலுவலகம் முன்பு திங்களன்று சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மின்வாரிய அலுவலகத் தில் நிர்வாக அலுவலராக கந்தவேல் என்பவர் வாரிய விதிமுறைகளுக்கு மாறாக ஒரே இடத்தில் நீண்ட காலம் வேலை செய்து வருகிறார். இவர், உடுமலை பகுதியில் தொழிற்சங்கத் தில் செயல்படும் தொழிலாளர்களை பழி வாங்கும் வகையில் செயல்பட்டு வருவதால், பல தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் மன உளைச்சலில் உள்ளார்கள். மின்வாரிய சட்டங்களுக்கு எதிராக செயல்படும் நிர் வாக அலுவலர் கந்தவேல் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கோட்ட துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மண்ட லச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணி யன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கோவிந்தன், ஜெகானந்தா, அப்துல் அகமது, பாலசுப்பிரமணியன், திருநா வுக்கரசு உள்பட திரளானோர் கலந்து கொண்டார்கள்.