திருப்பூர், ஏப். 18 - திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் 177 பேர் தேசிய அள விலான பள்ளிமாணவர்களுக்கு இடை யிலான திறனாய்வு ஒலிம்பியாட் போட் டியில் வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர். எம் டி எஸ் ஓ தேர்வில் 33 பேரும், ஏ டி எஸ் ஓ தேர்வில் 18 பேரும், இ டி ஸ் ஓ தேர்வில் 42 பேரும், எஸ் டி எஸ் ஓ தேர் வில் 43 பேரும், ஜி டி எஸ் ஓ தேர்வில் 41 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இத்து டன் 21 மாணவர்கள் ஆறுதல் பரிசு பெற்ற னர். இப்பள்ளியின் உதவி பொதுமே லாளர், பிராந்திய பொறுப்பாளர், பள்ளி முதல்வர், கல்வி நிலைய தலைவர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரி வித்தனர்.