திருப்பூர், செப்.11- திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை ஏவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பகத்சிங் சிலம்ப குழு மாணவ, மாணவிகள் 20 பேர் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் சிலம்பாட்ட கழகம் சார்பில் ஏவிபி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், 600 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், பகத்சிங் சிலம்ப குழு சார்பாக கலந்து கொண்ட 24 மாணவ மாணவிகளில் 20 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். 6 பேர் முதலிடமும், 6 பேர் இரண்டாமிடமும், 8 பேர் மூன்றாமிடம் பெற்று மொத்தம் 20 பரிசுகளை கைப்பற்றினர். மாலை வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப் பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் மாவட்ட தலைவர் வி.ரங்கசாமி, மாவட்டச்செயலாளர் கே.ரவிச்சந்தி ரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.