districts

img

பாலம் அமைக்கும் பிரச்சனை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருப்பூர், டிச.23- வேட்டுவபாளையம் பகுதியில் பாலம் அமைக்கும் பிரச்சனையை, வட மாநில தொழிலாளர்கள் தமி ழர்களை தாக்கியதாக திசை திருப்ப  சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.      திருப்பூர் மாவட்டத்திற்கு உட் பட்ட மங்கலம் அடுத்த வேட்டுவபா ளையம் பகுதியில் உள்ள சுடுகாட் டின் அருகாமையில் கழிவு நீர் தேங்கி  நிற்பதால், சுடுகாட்டில் ஊற்று நீர் சுரக் கிறது. இதனால் சடலங்களை அடக் கம் செய்யத் தோண்டும் குழியில் தண் ணீர் ஊற்று ஏற்படுகிறது. எனவே கழிவு நீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனப்  பொதுமக்கள் கோரிக்கை விடுத் துவந்தனர். இதையடுத்து, வடிகால் வசதி ஏற்படுத்த தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள தனியார் நூற்பாலை யின் வழித்தடம் பாதிக்கும் என்ப தால், பாலத்தை  மாற்றி அமைத்ததா கவும், இதனால் கழிவு நீர் வெளியே றாமல் மீண்டும் சுடுகாட்டில் தண்ணீர்  தேங்கும் எனவும், இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட போது, பஞ்சாயத்துத் தலைவர் நூற் பாலையில் பணியாற்றும் வட மாநில  தொழிலாளர்களை கொண்டு தாக்கி யதாக கூறப்படுகிறது. இதனால் அப் பகுதிமக்கள் மங்கலம் திருப்பூர் சாலையில் அமர்ந்து  சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து சம் பவ இடத்திற்கு சென்ற மங்கலம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  இதுகுறித்து வேட்டுவபாளை யம் பஞ்சாயத்து தலைவர் கூறுகை யில், இப்பகுதியில் சாலை அமைக் கும் பணி உட்பட 3 தரைப்பாலம் அமைக்கும் பணிகள் 73 லட்சம் நிதி  ஒதுக்கப்பட்டு தற்பொழுது நடை பெற்று வருகிறது. சுடுகாட்டின் அரு காமையில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால், மற்ற பணிகள் முடித்துவிட்டு இந்த பால பணியைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் 3 நாட்களுக்கு முன்பு  இப்பாலப் பணிகள் தொடங்கப்பட் டது. கழிவு நீர் சுடுகாட்டிற்குச் செல் லாத வகையில் நமக்கு நாமே திட்டத் தில் கழிவு நீர் தொட்டி கட்டவும்  திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலை யில், வெள்ளியன்று அப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர் வந்து, மற்ற சமூகத்தினரின் கழிவு நீரை நாங்கள் மிதிக்க வேண்டுமா எனக் கூறி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தகரா றில் ஈடுபட்டு, என்னுடன் இருந்தவர்க ளையும் தாக்க முற்பட்டனர். மேலும்  சனியன்று வட மாநில இளைஞர்கள் தமிழர்களை தாக்கிவிட்டதாக கூறி  அப்பகுதியைச் சேர்ந்த பாஜக மற் றும் மத அமைப்பினர் சிலர் பிரச்ச னையை கிளப்புகின்றனர். அப்பகு தியில் பாலம் அமைக்கப்பட்டால், சுற் றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்க ளுக்கு மிகவும் பயன்படும் என்பதால்  எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். எனது பெயரை கெடுக்க இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத் துகின்றனர். இதைச் சட்ட ரீதியாக சந் திப்பேன் எனத் தெரிவித்தார்.