districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தேர்தல் வழக்கில் இருந்து  குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை

ஈரோடு, ஜூன் 7- தேர்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிபிஎம் செயலாளர்  உள்ளிட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், கிளாம்பாடி பேரூ ராட்சியின் 6ஆவது வார்டுக்கு உட்பட்டது முனியப்பன் பாளையம். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை யொட்டி வார்டு மறு வரையறை செய்யப்பட்டது.  வாக்காளர் கள் அருகில் உள்ள அரசு ராமலிங்கம் நடுநிலைப் பள்ளி யில் வாக்கு அளித்து வந்த நிலையில், 5கிமீ சென்று வாக்கு  அளிக்கும் வகையில் மாறுதல் செய்தனர். இதனால் மக்கள் அனைவரும் வாக்களிக்க மறுத்தனர். இந்நிலையில், அரசு நிர்வாகம் இரண்டு டிராவல்ஸ் வாகனங்களை வைத்து வாக்களிக்க வருமாறு அழைத்தது. ஆனால் மக்கள் வாக்கு அளிக்க செல்லவில்லை. இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதை  பொருத்து  கொள்ளாத அரசு அதிகாரிகளின் தூண்டுதல் பேரில், மார்க் சிஸ்ட் கட்சியின் கொடுமுடி-மொடக்குறிச்சி செயலாளர் கே.பி.கனகவேல், தமமுக கொடுமுடி ஒன்றிய செயலாளர் மு.ரமேஷ், அதிமுக 6ஆவது வார்டு செயலாளர் சு.சிவக் குமார், அதிமுக முன்னாள் ரா.ராஜேந்திரன், அதிமுக கவுன்சிலர் செந்தில்குமார்  ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு ஈரோடு ஒருங்கிணைந்த நீதி மன்ற ஜே எம் 3 இல்  நடந்து வந்தது. திங்களன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்  விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறி னார். இவ்வழக்கினை நிதி எதுவும் பெறாமல் நடத்தி விடுதலை  பெற்றுத்தந்த வழக்கறிஞர் எல்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் மற்றும் விடுதலை பெற்றவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரி வித்தனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை, ஜூன் 7- அன்னூர் அருகே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 6 ஆவது நீரேற்ற நிலையத்தில் சோதனை ஓட்டத்தை கோவை  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய் தார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1045  குளங்களில் நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவிகித பணிகள் நிறைவு பெற்றிருந்தன. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் மீதப் பணிகள் நடை பெற்று வருகின்றது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று  வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் அத்திக்கடவு-அவிநாசி  திட்ட துவக்க விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அன்னூரில் அமைக்கப்பட்டுள்ள ஆறாவது நீரேற்று நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டார். அங்கு செயல்படும் தானியங்கி முறையையும் ஆய்வு  செய்தார். அதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நீரின்  வெளியேற்றும் அளவு ஆகியவற்றை பார்வையிட்டார்.  பின்னர் 119 ஏக்கர் உள்ள அன்னூர் குளத்தை ஆய்வு செய்தார். அப்போது அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ் வரன், அன்னூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க,  பொதுப்பணித்துறை சொந்தமான குளத்தின் கரையில் உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக அமைத்துக் கொள்ள  பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது.  ஆனால், இதற்கு தேவையான நிதி இல்லை. எனவே, நிதி வழங்கும் படி கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பரிசீ லித்து ஆவண செய்வதாக ஆட்சியர் பதிலளித்தார். ஆய்வின்  போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

வழிப்பறி செய்தவர் கைது

கோவை, ஜூன் 7- கோவை, கோட்டைமேடு, செட்டி தெருவை சேர்ந் தவர் அகஸ்டின் (40). இவர்  மாரியம்மன் கோயில்  அருகே சென்று கொண்டி ருந்த போது 2 பேர் கத்தியை  காட்டி மிரட்டி ரூ. 700 பறித்துத்  சென்றனர். இது குறித்து அகஸ்டின், கடைவீதி காவல்  நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில், போலீ சார் விசாரித்த போது புலிய குளத்தைச் சேர்ந்த சுபாஷ்  (27), கோகுல்நாத் (27) ஆகி யோரை கைது செய்து நீதி மன்றத்தில் நேர் நிறுத்தி  கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி வீசா வழங்கி பணமோசடி

கோவை, ஜூன் 7- கோவையில் போலி வீசா வழங்கி ரூ.11.71 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பிரேமரத்னா என்பவரது மகன் மங்கலநிசாந்தா. இவர் திருப்பூர் மாவட்டம், தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள வடகோவையில் ‘‘ஜேகே ஓவர்சீஸ்’’ என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (34) என்பவரை வீசா பெறுவ தற்காக அணுகினார். அப்போது அவர், தனக்கு மற்றும் தனது உறவினர்களுக்கு வீசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் வீசா பெறுவதற் காக ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்தார். அப்போது, ஜஷ்வா வீசா பெற ரூ.11,71,466 செலவாகும் என  கூறினார். இதனைத்தொடர்ந்து மங்கலநிசாந்தா உள்ளிட்ட அவரது உறவினர்கள் சேர்ந்து ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு கட்டங்களாக ரூ.11,71,466 செலுத்தியுள்ளனர். இதன் பின் அவர்களுக்கு ஜஷ்வா வீசா பெற்று கொடுத்தார். ஆனால், அந்த வீசா போலியானது. இதனையறியாமல் மங்கல நிசாந்தாவின் உறவினர் ஒருவர் அந்த விசா மூலமாக இலங்கை சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு அவர் வைத்திருந்தது போலி வீசா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது  செய்து, அங்குள்ள சிறையில் அடைத்தனர். இந்த தகவல் மங்கலநிசாந்தாவுக்கு தெரியவந்தது. அவர் உடனே இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் தனியார் நிறுவன உரிமையாளர் ஜஷ்வா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.10 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.10 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் தருமபுரி, ஜூன் 7- தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு, செவ்வாயன்று 2,468 கிலோ பட்டுக் கூடு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.583க்கும், குறைந்தபட்சமாக ரூ.276க்கும்,  சராசரியாக ரூ.443க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட் சத்து 93 ஆயிரத்து 563க்கு வர்த்தகம் நடைபெற்றது.

நாளை டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு

சென்னை, ஜூன் 7- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9 ஆம் தேதி முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து 11, 12 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு செர் லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங் கேற்கிறார். கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர், ஈரோடுக்கு பேருந்து நிலை யம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை  திறந்து, சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலம் மாவட்டத்தில் சீர்மிகு நகர திட்டத் தின் கீழ் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகள் என சுமார் ரூ.2  ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முதல் வர் தொடங்கி வைக்க உள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளவிருந்த முதலமைச்ச ரின் பயணம் தற்போது ஜூன் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் முதல் வர் ஆய்வு செய்கிறார்.