districts

பாஜகவின் கைக்கூலியாக தேர்தல் ஆணையம்

ஈரோடு, மார்ச் 27- தமிழகத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றி அடையும் என்று தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தேர்தல்  ஆணையம் பாஜகவின் கைக்கூலி யாக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கி ரஸ் சார்பில் ஈரோடு தொகுதி திமுக  வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும்  செயல்வீரர்கள் கூட்டம் காங்கிரஸ்  கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் (பொறுப்பு) செல்வம் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் திமுக வேட்பாளர் கே.இ.  பிரகாஷை அறிமுகம் செய்து ஈரோடு  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் பேசியதா வது,   இந்தியா கூட்டணியை உருவாக் கியதில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய  பங்கு உண்டு. பிரதமர் மோடி தனது  பெயரை மோடி என்பதற்கு பதில்  தேநீர் என்று வைத்துக் கொள்ள லாம். அவர் அடிக்கடி தமிழகத்திற்கு எதற்காக வருகிறார் என்று யாருக் கும் புரியவில்லை. இந்த தேர்த லில் மீண்டும் பிரதமராக மோடி வந் தால் அமைதியாக இருக்க முடியாது.  ஜாதி, மொழி, கலாச்சாரத்தால் பிளவு  ஏற்படும். அவர் இப்போதே சர்வாதி காரி போல  செயல்படுகிறார்.  காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி போன்றவர்கள் கடுமையாக உழைத்து சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்கள். பெரியார், காமரா ஜர், அண்ணா, கலைஞர் போன்றவர் கள் சமூக நீதிக்காக உழைத்தவர் கள். இவர்களின் உழைப்பால் தான்  இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.  சமீபத்தில் மழை வெள்ளத்தால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது பாதிக் கப்பட்ட மக்களுக்காக முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்க ளும் ஓடோடி வந்து மக்கள் பணி யாற்றினார்கள். ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக என்ன  செய்தார்? நாம் வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 28 பைசாவை மட்டுமே தமிழகத்திற்கு திருப்பி தருகிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி தந்திருக்க வேண்டாமா? டி.ஆர்.பாலு கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நிதி வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாட்டை பிரதமர் மோடி வஞ்சித்து விட்டார்.  இது தமிழக மக்களுக்கு நன்றாக  தெரியும். இந்த தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரகாஷ் வெற்றி பெற செய்ய நீங்கள் கடு மையாக உழைக்க வேண்டும் என பேசினார்.  இதனை தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கள் கொள்கை கூட்டணி அல்ல. அவை கோடிக்கணக்கான ரூபா யினை கொள்ளை அடிக்கப் போகும்  கூட்டணி என்றும் எடப்பாடி பாஜக  குறித்து தேர்தல் பிரச்சார கூட்டங்க ளில் விமர்சித்து பேசுவது இல்லையே  என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக் கும் போது பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேசினால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிஐ கையில் எடுத்து  விடும் என்ற பயத்தில் இருக்கிறார். மதிமுக கேட்ட பம்பர சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்து விட்டதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியாக செயல் பட்டு வருகிறது என்றார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு விரை வில் வருவார். பிரியங்கா காந்தி யையும் அழைத்து இருக்கிறோம். தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறினார். மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடிகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்ப தாகவும்  ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.