districts

img

மழைநீர் வடிகால் கட்ட தோண்டப்பட்ட கால்வாய்களில் தொடரும் விபத்துகள்

உடுமலை, ஏப்.7- உடுமலை நகரபகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்க சுமார் 10  கோடி நிதியில் கடந்த வருடம் கட்டுமான வேலைகளை நகராட்சி நிர்வாகம் தொடங் கியது. பல இடங்களில் முழுமையாக வேலை  முடியாத நிலையில் தோண்டப்பட்ட குழிக ளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடுமலை நகராட்சியில் மொத்த உள்ள  33 வார்டுகளிலும் பேருந்து நிலையம் மற்றும்  மக்கள் அதிகம் வரும் சந்தை பகுதிகளில் மழைநீர் வெளியே செல்லும் வகையில் கால் வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் உடுமலை நகரில்  செயல்பட தொடங்கிய நிலையில், கழிவுநீர்  சென்று கொண்டு இருந்த சாக்கடை கால் வாய்களை முழுமையாக அகற்றி விட்டு, அதே இடத்தில்  காங்ரீட் கலவையால் மூடப் பட்ட கால்வாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் தொடர் விபத்து கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பேருந்து  நிலையம் அருகில், மழைநீர் கால்வாய் வேலைகள் செய்ய பல மாதங்களுக்கு முன் பாக தோண்டப்பட்ட இடத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதுவும் இல்லை. இதனால் அப் பகுதிகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. பொது மக்கள் நலன் கருதியும், தற்பொ ழுது மாரியம்மன் தேர் திருவிழா நடைபெற்று  வருவதால், ஆபத்து ஏற்படும் இடங்களில் நக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.