நாமக்கல், மே 4- பள்ளிபாளையம், அலமேடு பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவ தாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. பள்ளிபாளையம் முதல் ஆலாம் பாளையம் சாலை வரையிலான பணிகள் 90 சதவிகிதம் முடிவுபெற்ற நிலையில், இன்னும் சில மாதங்களில் பணிகள் முழுமை யாக முடிவுபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அலமேடு, ஜீவா செட் உள் ளிட்ட பகுதிகளில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பலர் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகை யில், ஜீவா செட், அலமேடு உள்ளிட்ட பகுதி யில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் இருந்த மின் கம்பங்களை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பால பணிகளுக்காக அகற்றி விட்டனர். இதன் காரணமாக போதிய வெளிச்சம் இல் லாத நிலை ஏற்படுகிறது. மேலும், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் எதிர் எதிர் திசையில் சென்று வருகிறது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக வருவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் விபத்துகள் காரணமாக உயிரிழப்பும் ஏற் பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை யினர் போர்க்கால அடிப்படையில், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் வேகத்தடை களை அமைக்க வேண்டும். வெளிச்ச மில்லா பகுதிகளில் முறையான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி, விபத்தை குறைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றனர்.