districts

img

சிஐடியு வேலை நிறுத்த அறிவிப்பு எதிரொலி தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கைகள் ஏற்பு

உதகை, ஜன. 31- நிலுவை ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வேலை  நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில்,  பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகள்  கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்த தான் அடிப்படையில் போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது. நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும். நகராட்சியின் கட்டுப்பாட்டில் குப்பை வாகனங்கள் இருந்த போது, நிரந் தர் ஊழியர்கள் வாகனங்களை இயக்கி வந்த னர். அப்பொழுது வாகனங்களில் எந்த பழு தும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ஒப்பந் தம் எடுத்துள்ள அருணை பார்ம் என்ற ஒப்பந்த தாரர் வாகனங்களை அவர்கள் கட்டுப்பாட் டில் கொண்டு வந்த பிறகு, பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்து முக்கோணம் வொண்டர் லேன்ட் பகுதியில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இதனால் நகரத்தில் குப்பை கள் தேங்கி கிடக்கின்றன. உடனடியாக வாக னங்களை பழுது பார்த்து, சரி செய்து இயக்க  வேண்டும். ஒப்பந்த ஊழியர்களிடம் பிடித் தம் செய்யப்பட்ட பி.எப், இஎஸ்.ஐ. தொகையை சம்பத்தப்பட்ட நிறுவனங்க ளுக்கு செலுத்த வில்லை. உடனடியாக அதனை செலுத்த வேண்டும். ஒப்பந்த தாரரிடம் ஊழியர்களின் சம்பளப்பட்டியலை வழங்குமாறு பலமுறை கேட்டு இதுவரை வழங்க வில்லை. சம்பளத்துடன் சம்பளப் பட்டியலை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு ஒப்பந்ததாரர் அரசு விடுமுறை களை சட்டப்படி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, காலணி மற் றும் பணிபுரியும் உபகரணங்களான கூடை, துடைப்பம் ஆகியவற்றை வழங்காமல் நிர்வா கம் காலந்தாழ்த்தி வருகிறது. உடனடியாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி  நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித முன் னேற்றமும் இல்லாத நிலையில், பிப்ர வரி 1ஆம்தேதி வேலை நிறுத்த போராட் டத்தை சிஐடியு அறிவித்தது. இதனைய டுத்து, செவ்வாயன்று உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதரன், எஸ்ஓ பழனிச்சாமி ஆகியோர், சிஐ டியு தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், மாவட் டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் மற்றும் நக ராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க  செயலாளர் சி.சேகர், பொருளாளர் ரவி மற் றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இப்பேச்சு வார்த்தையின் முடிவில், சிஐடியு முன்வைத்த  கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுக்க  முடியாமல், விரைந்து அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றி தருவதாக நிர்வாகம் உறுதியளித்தது. இதனையேற்று, வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்தனர்.