districts

img

கற்றல் செயல்பாடு இல்லாததால் சாதி ஒழியவில்லை

ஈரோடு, டிச. 12- படித்தவனுக்கும், கல்வி கற்றவனுக்கும் வித்தியாசம் உள்ளது. படித்து பட்டம் வாங்கி யிருக்கலாம். பள்ளியில், வகுப்பறையில் கற் றல் செயல்பாடு நடக்கவில்லை. ஆகவே தான் சாதி ஒழியவில்லை என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் சுதந்திர தின பொன்விழா, சுதந் திர போராளி திப்பு சுல்தான், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளையொட்டி சமூக நல்லிணக்க கருத்தரங்கம் அந்தியூரில் ஞாயி றன்று நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹாத்திம் தாய் தலைமை வகித்தார். கீதா சேகர் வரவேற் றார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந் திர பாபு, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து ஆகி யோர் கருத்துரையாற்றினார்.  இந்நிகழ்வில், பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று பேசுகையில், மகாகவி சுப்பர மணிய பாரதி சாதிய அடையாளங்களான பூணூலை கழற்றினார். பரிணாம வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உதாரணம் வள்ளலார். சிந்த னைப் போக்கு உயர்ந்த கொண்டே வந்து “வாடிய பயிரைக் கண்ட பொதெல்லாம் வாடி னேன்” என்றார் வள்ளலார். இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றார் பாரதிதாசன். கல்வி, இருள் என்னும் அறியாமையை அகற் றும், அறிவைப் பெருக்கும். இன்று படித்த வன் தானே சுரண்டிக்கொண்டுள்ளான். கல்வி  அறிவைப் பெருக்கும் என்பது எப்படி! படித் தவனுக்கும், கல்வி கற்றவனுக்கும் வித்தியா சம் உள்ளது. படித்து பட்டம் வாங்கியிருக்க லாம். அங்கே கற்றல் செயல்பாடு நடக்க வில்லை. அதனால் தான் சாதி ஒழிய வில்லை.  

நம் நாட்டில் பிணத்திற்கும் சாதி சான்று வேண்டும். இல்லையென்றால் பிணத்தை அடக்கம் செய்ய முடியாது. ஆனால் ஒரே  நாடு என்கின்றனர். அதனால் தான் இந்தியா  தேசமாக இல்லை, சாதியாகப் பிரிந்து கிடக்கி றது என்றார் அம்பேத்கார். தேசமாக மாற்று வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஒரே தேசம், ஒரே கல்வி முறை என் கின்றனர்.  கல்வி எல்லோரையும் மனிதனாக மாற் றும். ஜோதிராவ் பூலேவும், சாவித்ரி பாய்-யும் நடத்திய போராட்டத்தால் தான் நாம் இன் றைக்கு படித்துக் கொண்டிருக்கிறோம். இந் திய பொதுப்பள்ளியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் பூலே தான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை, அவமானமாகப் பார்க்காமல், இந்த சமூகம் விழித்தெழ வேண்டுமென்றால் இந்த அவமானத்தைத் தாங்கித்தான் ஆக வேண் டும் என்று தெருவில் நின்றவர் சாவித்ரி பாய். தேசிய கல்விக்கொள்கை 2020ல் ஆவ ணத்தில் ஒரு இடத்தில் கூட கல்வியைப் பற்றி பேசவில்லை. எண்ணும், எழுத்தும் தெரிந் தால் போதும் என்கிறது. அடுத்து வேலைக் கான திறன் கொடு என்கிறது. ஒட்டுமொத்த கல்வியும் இவ்வளவு தான். வேலைக்கான திறன் என்பது தொழில்கல்வியும் அல்ல,  தொழில்நுட்பக்கல்வியும் அல்ல. (Vocational Skill) வேலைக்கான கல்வி யைக் கொடு என்பதுதான். 

உலகில் பெரும்பாலான நாடுகளில் 6, 7  வயதிற்குப் பிறகுதான் குழந்தைகளை பள் ளிக்கு அனுப்புகின்றனர். இந்தியாவில் 3 வய திலேயே பள்ளிக்கு அனுப்புகின்றனர். தந்தி ரத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும் வித்தி யாசம் உள்ளது. பள்ளியில் மாணவர் அறிவை பெறுகிறார். கோச்சிங் சென்டர் என்னும் பயிற் சிக்கூடத்தில் தந்திரத்தைக் கற்றுக்கொள்கி றார்.  இவை எதற்காக என்றால் பள்ளி நடத் தினால் அரசிற்கு செலவு. கோச்சிங் சென்டர் நடந்தால் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரும். அபரி மிதமான லாபம் வரும் போது தேர்தல் பத்தி ரங்கள் என்ற பெயரில் அரசாங்கம் நடத்தும் கட்சிக்கு பணம் கிடைக்கிறது. இதையெல் லாம் தாண்டி ஒருவர் கல்லூரியில் கால் வைத்தால் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். முதல் வருடத்தில் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் இரண்டாம் வருடத்திற்குச் செல்ல முடியும். கண்டிப்பாக 4 ஆண்டுகள் படிப்பை முடிக்க முடியாது. இந்நிலையில், உயர் கல்விக்கும், உயர் வேலை வாய்ப்பிற் கும் எதை தகுதியாக வைப்பார்கள் என்று தெரியவில்லை.  ஒரு குறிப்பிட்ட சாதிக்கு போட்டியாக மற் றவர்களும் வந்து விட்டார்கள் 75 வருடங்க ளாக ஒரு வன்மம் இருந்தது. இனியும் அந்த  சாதிக்கு போட்டி வந்து விடக்கூடாது என்ப தற்காக இந்த கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. நம் ஊரில் பள்ளி, கல்லூரி  வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கல்வியை மறுக்கும் ஆவணம் இது. ஆகவே இந்த புதிய தேசிய கல்வி  கொள்கையை எதிர்த்து போரிட்டுக்கொண்டி ருக்கிறோம் என்றார்.  இந்நிகழ்வில், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஸ்வரன், கே.எஸ்.இஸாரத் அலி, பி.சுப்ரமணி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்ன தாக, வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டன. நிறைவாக, சார்லஸ் ராஜா நன்றி கூறி னார்.