கோவை, ஆக.25- அன்னூர் அருகே குளத்தில் தண் ணீர் நிரப்ப அமைக்கப்பட்ட அவிநாசி - அத்திக்கடவு திட்ட குழாய்கள் திடீ ரென அகற்றப்பட்டதால் பொதுமக் கள் அதிருப்தியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ளது கோபிராசிபுரம் கிரா மம். இங்கு பெருமளவு விவசாய நிலங்கள் உள்ள நிலையில், இப்ப குதி விவசாய பாசனத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக அங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு அண்மையில் அவி நாசி - அத்திக்கடவு திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீரை செரி வூட்டும் பணிகள் நடைபெற்றன. இதற் காக குளத்திற்கு அன்னூர், குன்னத் தூராம் பாளையம் பகுதியில் இருந்து வழியோரம் உள்ள குளங்களில் தண் ணீர் நிரப்பும் திட்டத்தில் இந்த குள மும் இருந்தது. இதனையடுத்து குழாய் கள் பதிக்கப்பட்டு குளத்திற்கு கொண்டு வரப்பட்டு, சோலார் பேனல் பம்பிங் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பணி களும் மேற்கொள்ளபட்டன. இதனி டையே கடந்த 2 மாதங்களாக அவி நாசி - அத்திக்கடவு திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, குளத் திற்கு தண்ணீர் விட்டு பார்த்து வரும் நிலையில், கோபிராசிபுரம் குளத்திற் கும் தண்ணீர் வரும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், வெள்ளியன்று கோபிராசிபுரம் பகுதி குளத்திற்கு வந்த அவிநாசி - அத்திக்கடவு திட்ட ஒப்பந்த ஊழியர்கள், திடீரென அந்த குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கட் டுமான பணிகளை அகற்றியதாகவும், அங்கிருந்த சோலார் பேனல்களை யும் எடுத்து சென்றதாக கூறப்படு கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், எந்தவித முன்னறிவிப் பும் இன்றி கட்டுமான பணிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், குளத்திற்கு வந்த தண்ணீர் குழாய் களையும் தோண்டி எடுக்கப்பட்ட தால் அதிருப்தி அடைந்த விவசாயி கள், தங்கள் பகுதிக்கு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, விவசாயிகளை வஞ்சிக்காமல் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும், இக் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவிநாசி - அத்திக் கடவு திட்ட உதவி செயற்பொறியா ளர் கூறுகையில், மேற்கண்ட குளத் திற்கு தண்ணீர் வழங்க ஏற்கனவே குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், குழாய்கள் பதித்து வரும் இடம் ஒரு இடத்தில் தனியார் தோட்டம் வழி யாக வருகிறது. அதற்கு அவர் ஒப்பு தல் வழங்காமல் இருப்பதாலும், அது சம்பந்தமாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது அந்த குளத்திற்கு தண்ணீர் விட முடி யாது என்ற நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டு மான பணிகளை அப்புறப்படுத்தப் பட்டு வருவதாக விளக்கம் அளித் தார். இனி அந்த குளத்திற்கு இரண் டாம் திட்டத்தில் கீழ் கொடுக்க முடி யுமா? என பின்னர் தான் தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்தார்.