உடுமலை, பிப்.9- கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பிரச்சாரங்கள் புதனன்று நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம், பெரியகோட்டை ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள மாரியம்மன் நகர் பகுதி யில் புதனன்று கொத்தடிமை தொழி லாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சா ரம் விழுதுகள் அமைப்பு சார்பில் நடை பெற்றது. இதில் விழுதுகள் அமைப் பின் இயக்குனர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது, தமிழக அரசு பிப்.9ஆம் தேதியை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக அறிவித்து, கடைபிடித்து வருகிறது. நாட்டிலேயே இதுபோன்ற அறி விப்பை வெளியிட்ட முதல் மாநிலம் தமிழகம் தான். 1976ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றியது. கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க மாநில செயல் திட்டம் மற்றும் நிலையான செயல் பாட்டு நடைமுறைகளை உருவாக்கு தல் மற்றும் அறிமுகப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் எடுத்திருந்தாலும், பங்கு தாரர்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத் தும் அதிகாரிகளிடையே விழிப்பு ணர்வு இல்லாதது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. எனவே, அதை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து பொதுமக்களி டையே, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய சமூகத்தினரிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 9 ஆம் தேதியை கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க தொழிலாளர் துறை முன்மொழிந்துள்ளது. “மாநிலத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இல் லாத மாநிலமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் பார்வைக்கு உதவு வதையும் இது நோக்கமாகக் கொண் டுள்ளது” என்றார்.
இதனைத்தொடர்ந்து விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் பேசிய தாவது, பண்ணைகள் முதல் தொழிற் சாலைகள் வரை, மீன்வளம் முதல் வீடுகள் கட்டுவது வரை, இந்தியா தனது சேவை மற்றும் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகத் திறன்மிக்க ஆதாரமாக உழைப்பு மிகுந்த முறைகளை ஆராய்ந்து வருகிறது. ஆனால், தொழில்நுட் பத்தின் படையெடுப்புடன், இந்தப் போக்கு புதிய மையப் புள்ளிகளைத் தொட்டுள்ளது. இதன் மூலம் தொழி லாளர்கள் அடக்குமுறை மற்றும் தவ றான சிகிச்சைக்கு ஆளாக நேரிடுகி றது. எனவே, சட்டப்பூர்வ தீர்வுகள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது ஒரு விருப்பமாக மாறியது, அதன்பிறகு, இந்தியாவில் ‘தொழிலா ளர் சட்டங்களுக்கு’ வழிவகுத்தது, என் றார். மேலும், விழிப்புணர்வு பிரச்சாரத் தில் கலந்துகொண்டு உடுமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகா லஷ்மி முருகன் பேசுகையில், தொழி லாளர்களுக்கு அதிக வட்டிக்குக் கடன் களை வழங்குவதும், கடனை அடைப் பதற்காகக் குறைக்கப்பட்ட கூலிக்கு அவர்களை விரும்பத்தகாத சூழ்நிலை யில் வேலை செய்ய வைப்பதும், கொத்தடிமை தொழிலாளர்கள் என்று அறியப்படுகிறது. என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஸ்வநாதன், வார்டு உறுப்பினர் கள் உமாமகேஸ்வரி சிவகுமார், மயி லாத்தாள், பங்காரு வைரம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கொத்த டிமை இல்லாத தமிழகத்தை உருவாக் குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்து வம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கோ.பிரேமலதா தலைமையில், புதன்கிழமை கொத்த டிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் மருத்து வர்கள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக ஊழியர் கள் உட்பட பலர் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 சார்பாக புதன்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது . இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல் வர் கிருஷ்ணன் நிகழ்வினை துவக்கி வைத்து கொத்தடிமை தினத்தை பற்றி உரையாற்றினார். இதன்பின்னர் கொத்தடிமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.