கோவை, நவ.1- ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி கூட் டத்தில் வலியுறுத்தினர். கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் விக்டோரியா மஹாலில் மேயர் கல்பனா தலைமை யில் புதனன்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர் கள் பங்கேற்றனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் வி.இராமமூர்த்தி பேசுகையில், குப்பைக்கான வரியை நிர்ண யிப்பது என்பது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே, குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும் குப்பைகள் அப் புறப்படுத்தவதில் ஒப்பந்ததாரர்கள் சரிவர பணிகளை செய்வதில்லை. தூய்மைப் பணி யாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங் களும் சரியாக தருவதில்லை. இதனை கண் காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12 வார்டு மணியகாரம்பாளையம், தாகூர் ரோடு வடபுறம் ஆக்கிரமிக்கப்பட் டிருந்த சாலை அனைத்தும் 2017-2018 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது. இந்நிலை யில், இச்சாலையில் மின்கம்பங்கள் அமைக் கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரி சலை ஏற்படுத்துகிறது. எனவே, மின் கம்பங் களை சாலையோரங்களில் மாற்றி அமைக்க வேண்டும். 12ஆவது வார்டு காந்தி நகரில் பிரதான மழைநீர் வடிகால் மற்றும் குறுக்கு சாலை வடிகால்கள் 2013-2014 ஆம் நிதி யாண்டில் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட் டுள்ளது. இதர பகுதியை கட்டுவதற்கு 2015-2016 ஆண்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக நிர்வாக அனுமதி கிடைக்கவில்லை. இதேபோல், உடையாம்பாளையம் கந்த சாமி நகர் பிரதான மழைநீர் வடிகாலை கட்டி கொடுக்க வேண்டுகிறேன். சின்ன வேடம்பட்டி பிரதான வடிகாலை தூர்வாரி மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து சிபிஎம் 13 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி பேசுகையில், வார்டுகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ளது. சாக்கடை கால்வாய்களில் சேதமடைந்ததால் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது. சேதமடைந்த வாய்க்கால்களை சீரமைத்து கழிவுநீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.