கோவை, மார்ச் 15- மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத ரவாளரும், கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் மெட்ரோ பர்னிச்சர் நிறுவனரு மான மெட்ரோ பாலு என்கிற ரா.பாலபரமசிவம் செவ்வா யன்று காலமானார். கோவை மாவட்டத்தில் ஒன்றுபட்ட ஏஐடியுசி தொழிற் சங்கத்தில் பஞ்சாலைத் தொழி லாளியாக நீண்டகாலம் பணியாற்றியவர் மெட்ரோ பாலு என்கிற ரா.பாலபரமசிவம் (82). சிறு பட்டறையாக துவங்கிய மெட்ரோ பர்னிச்சர் தன்னுடைய சொந்த உழைப்பினால் அதை நிறுவனமான வளர்த்தெடுத்தார். தொழில் துறை யில் சிறு அதிபராக இருந்த போதிலும், கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அளப்பறிய பற்று டன் இருந்து வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னிறுத்தி வந் தார். கட்சி இயக்கங்களிலும், பொது நிகழ்வுகளிலும் தானும், தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தி்னார். இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரா.பாலபரமசிவம் செவ்வாயன்று காலமானார். இவரது மறைவுச் செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் கே.மனோகரன், பீள மேடு நகரச் செயலாளர் கே.பாண்டியன், சிங்கை நகரச் செயலாளர் வி.தெய்வேந்திரன் மற்றும் தமுஎகச நிர்வாகி கள், கட்சி ஊழியர்கள் பலர் ரா.பாலபரமசிவம் குடும்பத் திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.