districts

img

ஆதார் சேவை மையம் மூடல்: பொதுமக்கள் அவதி

நாமக்கல், மார்ச் 13- ஆதார் சேவை மையம் திறக்கப்படாதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இந்த  நகராட்சியில் ஒன்றிய அரசின் ஆதார்  சேவை  வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதிய ஆதார்  கார்டு பதிவு செய்வது, பெயர் திருத்தம், முக வரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதார் சேவை மையத்தில் பள்ளிபாளை யம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மட்டுமல்லா மல், அருகில் உள்ள ஆலாம்பாளையம், வெப்படை புதுப்பாளையம்  உள்ளிட்ட பஞ்சா யத்து பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அதி களவு ஆதார் சேவை மையத்திற்கு வருகை தருகின்றனர்.  இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமா கவே இரண்டு பணியாளர்கள் இருக்க வேண் டிய இடத்தில் ஒரு பணியாளர் மட்டுமே ஆதார் சேவை பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டம் முழுவ தும் ஆதார் சேவை மையத்தில் பணியாற் றிய ஊழியர்கள், அருகில் உள்ள அரசு பள்ளி களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆதார் சேவை வழங்குவதற்காக சென்று விடு வதால், ஆதார் சேவை மையம் தற்காலிக ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வந் தது.  இந்நிலையில், செவ்வாயன்று தற்காலிக  பணியாளர் சொந்த வேலை காரணமாக விடு முறை எடுத்துச் சென்று விட்டதால் ஆதார்  சேவை மையம் மூடிய நிலையில் இருந்தது. வழக்கம்போல 9 மணிக்கு திறந்து விடும் என காலை முதலே ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், காலை 11 மணி வரையிலும் ஆதார் சேவை மையம் திறக்கப் படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட முயற்சித்தனர்.  இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் நகர மன்றத் துணைத் தலை வர் பாலமுருகன் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். இதில், ஆதார் சேவை மையம் மூடி  உள்ளதால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி  உள்ளதாகவும், அலுவலகத்தில் கேட்டால்  ஆதார் சேவை மைய ஊழியர் விடுமுறையில் உள்ளதாக கூறுகிறார்கள். குறைந்தபட்சம் ஆதார் சேவை மையம் இன்று செயல்படாது என்ற  ஒரு அறிவிப்பு கூட இல்லை. இதனால் நாங்கள் காலை முதலே காத்துக் கிடக்கி றோம். சாதாரண கூலி வேலை செய்யும் நாங் கள் ஆதார் சேவைக்காக ஒரு நாள் முழுவ தும் அலைகழிக்கப்படுகிறோம் என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து, ஆதார் சேவை மைய மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட நகர்மன்ற துணைத்தலைவர் உடன டியாக தற்காலிக ஊழியரை அனுப்புமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். பின்பு சிறிது  நேரத்தில் ஆதார் சேவை மையம் ஊழியரை கொண்டு செயல்பட தொடங்கியது. தொடர்ச் சியாகவே ஆதார் சேவை மையத்திற்கு போதுமான ஊழியர்கள் இல்லாததால், பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே முறையான நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதேபோல நகராட்சி மட்டுமின்றி அருகில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.