மேட்டுப்பாளையம், ஜன.23- இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் இடத்தின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.65 லட்சம் மதிப் பீட்டிலான மேம்பாட்டு பணிகளுக்கு வரும் மார்ச் மாதத்திற் குள் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த சிறுவர் பூங்காவினை ஆ.ராசா எம்.பி., திறந்து வைத்தார். இதன்பின்னர், மணி நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் மேட் டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு பவானியாற்றி லிருந்து தண்ணீர் எடுக்கும் நீரேற்று நிலையத்தை பார்வை யிட்டார். இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம், சத்திய மூர்த்தி நகரில் உள்ள இறுதி சடங்குகள் நடைபெற அமைக் கப்பட்டுள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்திற்கு சென்று, அங்குள்ள நிர்வாகிகளின் கோரிக்கையான புதிய கழி வறைகள், பவானியாற்றில் மக்கள் பாதுகாப்பாக தங்களது
முன்னோர்களுக்கு திதி கொடுக்க வசதியாக படித்துறை யினை மேம்படுத்துதல், நந்தவனம் பகுதியில் சாலை சீர மைத்தல் போன்ற கோரிக்கைகள் ஏற்று இப்பணிகள் அனைத் தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து ஆ.ராசா எம்.பி., செய்தியாளர்களிடம் பேசு கையில், நந்தவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக ரூ.65 லட்சம் வரும் மார்ச் மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும், என் றார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகா மில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு, உடனுக்குடன் உடனிருந்த அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.