districts

img

கடும் போக்குவரத்து நெரிசல்: திணறும் இளம்பிள்ளை

இளம்பிள்ளை, ஜூன் 6- இளம்பிள்ளை நகராட்சி பகுதியில்  சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட் டுள்ள கடைகளால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கு உள் ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற் றும் இடங்கணசாலை சுற்றுவட்டார பகு தியில் உள்ள பொதுமக்கள், வெளியூர் வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஜவுளி நகரமாக இளம் பிள்ளை இருந்து வருகிறது. இப்பகுதி யில் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் காட்டன், பாலிஸ்டர், பட்டு உள்ளிட்ட  சேலைகள் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. ஆகையால், இங்கு கனரக வாகனங்கள் மற்றும் மூலப் பொருட்கள் ஏற்றி வரும் சிறிய வாக னங்கள், கார்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இங்கு வாகனத்தை நிறுத்த வசதி இல்லாததால் வாக னத்தை சாலையின் ஓரமாக அங்கும், இங் கும் நிறுத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல் லாமல், புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் பல ஆயிரத்துக்கு மேல் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

இந் நிலையில் புற்றீசல் போல் வீதிக்கு வீதி போட்டி போட்டுக் கொண்டு ஜவுளிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலை யோரம் உள்ள கடைகள் சாலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வியாபாரிகள் கடை முன்பு சாலையினை ஆக்கிரமித்து வாக னங்களை நிறுத்தி வருவதும் போக்கு வரத்து நெரிசலுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக காடையாம்பட்டி பிரிவு  சாலை, இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் பிரிவு, இளம் பிள்ளை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவ திக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறு கையில், ஒரு நாளைக்கு பலமுறை மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாக னத்திற்கு பெட்ரோல், டீசல் அதிக அள வில் விரயமாகி வருவதோடு மட்டு மின்றி, குறிப்பிட்ட இடத்திற்கு உரிய  நேரத்திற்கு செல்ல முடியாமல் காலம் தாமதமாகி வருகிறது. எனவே, சம்பந் தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத் துக்கு இடையூறாக இல்லாமல், முக் கிய இடங்களில் ரவுண்டனா அமைத்து, ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய  வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.