சேலம், ஏப்.1- போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரும் பொது மக்களை மீட்க, போதுமான போக்குவரத்து காவலர்களை நிய மிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே. கே.நகர், பெருமாகவுண்டம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிக ளில் ஜவுளி உற்பத்தி தொழில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆகை யால், இளம்பிள்ளை பகுதிக்கு பல்வேறு மாவட்டம், மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஜவுளி வாங்க பொது மக்களும், வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். அதனால் எந்நேரமும் இளம்பிள்ளை பகுதியில் சாலை ஓரங்களில் கன ரக வாகனங்கள், கார், இருசக்கர வாகனங்கள் ஆகிய வற்றை ஆங்காங்கே சாலையில் பலரும் நிறுத்தி வருவ தால் இதர வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின் றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் துரித நடவடிக்கை யாக சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், போதுமான போக்குவரத்து காவ லர்களை நியமித்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.