உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஓவியம் வரைந்து உலக சாதனை நிகழ்வு
உதகை, அக்.1- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, உதகையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் 160 ஓவியர்களை கொண்டு 120 நிமிடங்களில் 160 மீட்டர் ஓவியம் வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை அருகே மெக்கன்ஸ் கட்டிட கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உலக சுற்றுலா தினத்தை முன் னிட்டு, 160 ஓவியர்களை கலந்து கொண்டு 120 நிமிடங்களில் 160 மீட்டர் ஓவியம் வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 160 ஓவியர்கள் கலந்துக் கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்தனர். இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை, போர், வன விலங்குகள், கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் பண் பாட்டை குறிக்கும் வகையில் பல்வேறு ஓவியங்கள் வரை யப்பட்டன. இதனை மெக்கன்ஸ் கல்லூரி தாளாளர் முரளி குமரன் துவக்கி வைத்தார். உலக சாதனை படைத்தற்கான இந்தியன் புக் ஆப் வெர்ல்ட் ரிக்கார்ட்ஸ், ஐரோப்பிய யூனியன் புக் ஆப் வெர்ல்ட் ரிக்கார்ட் மற்றும் அமெரிக்கன் புக் ஆப் வெர்ல்ட் ரிக்கார்ட் ஆகிய அமைப்புகள் சார்பில் இச்சாதனை பதிவு செய்யப்பட்டது. இந்த சாதனையில் ஈடுபட்ட அனைத்து ஓவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாஜக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் கைது
நாமக்கல், அக்.1- சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி மற்றும் காங் கிரஸ் கட்சியின் மீது அவ தூறு பரப்பிய பாஜக ஊடகப்பிரிவு பொறுப் பாளரை கரூர் சைபர் கிரைம் போலீசார் சனியன்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசி புரம் அருகே உள்ள முத்து காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பிரவீன் ராஜ். இவர் பாஜக மாநில ஊடகப்பிரிவு பொறுப்பாள ராக இருந்து வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார் என கூறப்படு கிறது. சமூக வலைதளங் களில் காங்கிரஸ், திமுக கட்சி களை விமர்சித்து வந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் காங் கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குறித்து ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதாக கூறப் படுகிறது. இது தொடர்பான புகா ரின் பேரில், கரூர் சைபர் கிரைம் போலீசார் பிரவீன் ராஜை நள்ளிரவில் கைது செய்து கரூர் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம், அக்.1- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுமையான காலை நிலையை அனுபவிக்க ஏரா ளமான சுற்றுலா பயணிகள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை புரிகின்றனர். தற் போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் தொடர் விடுமுறை காரணமாக ஏற் காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப் படுகிறது. அதன்படி ஞாயி றன்று காலை முதல் ஏற்காட் டில் உள்ள பூங்காக்கள் மற் றும் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அங்கு படகு சவாரி செய்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே ஒரே நேரத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட் டில் குவிந்ததால், கடும் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒண்டிக்கடை, ஏரி சாலை, மஞ்ச குட்டை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன.